அரும்புகள் மலரட்டும்: 2014

Monday, 29 December 2014

சிறந்த 25 பொன்மொழிகள்


1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம்
சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த
பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

Friday, 19 December 2014

காமெடி கலாட்டா

வலை உறவுகளுக்கு வணக்கம்
☑️டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
🔗எந்த பாட்டுக்கு?

🔘ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
🔗நோயோடதான்!

☑️தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
🔗அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?

Saturday, 13 December 2014

நீயாக வேண்டும் நான்!


புல்லாங்குழல் புகுந்தக் காற்று
இசையாய் வெளியேறும் அதிசயத்தை
உன் மூச்சுக்காற்றிலும் உணர்ந்தேன்

Friday, 12 December 2014

வான்வெளியில் ஒரு காதல் காட்சி


இரவெல்லாம் உலகிற்கு ஒளிமுகம் காட்டி
இன்பம் தந்த நிலவுப் பெண்ணை
கரம் பிடிக்கும் ஆசை வர!

Wednesday, 10 December 2014

பலிபீடங்களாகும் தமிழக பள்ளிகள்! மாணவச் சமுதாயச் சீரழிவுக்கு யார் காரணம்?

வலை உறவுகளுக்கு வணக்கம்

இப்போதெல்லாம் செய்தித்தாள்களைப் புரட்டினாலே வன்முறை, கொலை, கொள்ளை என இப்படியாய் செய்திகள். படிக்கும் நம்மையே ஒரு புரட்டு புரட்டிப் போடுகிறது. நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது எனும் பயம் நம்மோடே பயணிக்கவும் தொடங்குவதை உணரலாம்.

Thursday, 4 December 2014

எல்லாம் என் நேரம்!

வணக்கம் வலை உறவுகளே!

வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவர்களும் சோதனைகள் பல சந்தித்தவர்களும் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை எல்லாம் என் நேரம் என்பது தான். உண்மையில் நேரம் நமக்கு எதிராக செயல்படுகிறதா என்ன? நேரத்தை நாம் சரியாக கையாளமல் இப்படியொரு நொண்டி சாக்கு சொல்லித் திரிகிறோம் என்பது தானே உண்மை.

Monday, 1 December 2014

கடவுளின் மௌன மொழி


ஆசைக்கொன்று ஆஸ்திக்கொன்று என்பார்
ஆறாண்டில் ஆறினைப் பெற்றெடுத்து
கடவுள் தந்த வரமென்பார்

மரத்தடியில் அமர்ந்திருக்கும் என்னிடம்
மாடமாளிகை மாடிக்கட்டடம் வேண்டுமென்று
வேண்டுதலை முன் வைப்பார்

Monday, 17 November 2014

கனவில் வந்த காந்தி (தொடரும் கனவு)

நண்பர்களுக்கு வணக்கம்.
ஒரு வழியாக இணையத்திற்குள்ளே மீண்டும் வந்து விட்டேன். தேவக்கோட்டை மண்ணின் மைந்தர் சகோதரர் திரு.கில்லர்ஜி கொழுத்திப் போட்ட மத்தாப்பு இணையப் பக்கமெல்லாம் ஒளி விடுவது கண்டு மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த ஆட்டத்திற்கு கவிஞர் திரு.நா.முத்துநிலவன் ஐயா அவர்களும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆய்வாளர் திரு.ஜம்புலிங்கம் ஐயா அவர்களும் இழுத்து விட்டிருக்கிறார்கள். எண்ணங்களை விசாலப்படுத்திக் கொள்ள உதவும் இது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வாய்ப்பளித்த நண்பர்கள் இருவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு நானும் களம் இறங்குகிறேன்.

மீள் வருகை


மழை வரும் மாலைப்பொழுதைமுந்தி சொன்னது மேகக்கூட்டம்
மழையும் வந்தது இடியோடு

வராத விருந்தினர் வந்ததைப்போல்
வணக்கம் சொல்லி வரவேற்றோம்
வாசல் வந்த மர்ந்து

Thursday, 25 September 2014

கணிதத்தில் சில சுவாரசியங்கள்


வணக்கம் நண்பர்களே
வணக்கம் என்பது ஐந்தெழுத்து
நண்பர்கள் என்பது ஆறெழுத்து
என்னென்னமோ பொழம்புறானே 
இதை எல்லாம் கேட்கிறது 
எங்க தலையெழுத்துனு நீங்க 
பொழம்புறது சத்தமா கேட்குது
இனி எல்லாமே கணக்கு தான்....

Wednesday, 24 September 2014

மறுஜென்மம் பற்றிய சந்தேகங்கள்

வணக்கம் நண்பர்களே!

மறுஜென்மம் எனும் வார்த்தையில் கூட எனக்கு நம்பிக்கையில்லை என்று தான் சொல்வேன். ஆனாலும் எனது நண்பர்கள் முன் வைத்த வாதத்தால் ஏற்பட்ட ஐயங்களுக்கு உங்களின் மேலான எண்ணங்களை அறிந்து கொள்ளும் வகையில் சில கேள்விகளை முன் வைக்கிறேன். தகுந்த விளக்கங்கள் கிடைக்கும் எனும் நம்பிக்கையில்...

1. மனிதன் இறந்தவுடன் அவனுக்கு மறுஜென்மம் உண்டா?

Saturday, 20 September 2014

இணையக் கவிதை



முன்னிரவு பின்னிரவு எனக்கில்லை
முயன்று படுத்தேன் முடியவில்லை
முப்பொழுதும் உன்மடியில் தவழுகிறேன்..

புத்தம்புது குழந்தைகளை நொடிக்கொருமுறை
பிரசவிக்கும் வித்தைப் பெற்றாய்
பாவிப்பய மனதைக் கெடுத்து வைத்தாய்..

Thursday, 18 September 2014

ஃபேஸ்புக் பற்றிய அறிந்திராத பத்து உண்மைகள்


காலையில் எழுந்து ஃபேஸ்புக் பார்த்து
காபி குடித்து...

வேக வேகமா கோபித்துக் கொண்டு எங்க கிளம்பிறீங்க நண்பர்களே! இங்க வாங்க கொஞ்சம் நேரம், கோபம் எல்லாம் குறைந்த அப்பறம் கிளம்பலாம் இணையத் தளத்தில் அதிகமான பயன்பாடு ஃபேஸ்புக்காக (முகநூல்) தான் இருக்கிறது.நம்ம ஆளுங்க முகநூல்னு ரொம்ப சரியாக தான் தமிழாக்கம் கொடுத்துருக்காங்க. காலையில் எழுந்து தன் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதற்கு முன் தன் முகத்தை ஃபேஸ்புக் இடம் காட்டி விடுகிறார்கள்.

Monday, 15 September 2014

விருது வாங்கி கை எல்லாம் வலிக்குதுங்க நீங்க கொஞ்சம் பிடிங்களேன்

வலை உறவுகளுக்கு வணக்கம்

எல்லா புகழும் இறைவனுக்கே!!!

தமிழ் வலை உலகை கலக்கி வரும் THE VERSATILE BLOGGER AWARD சக எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் அற்புதமான விடயம்.
ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!  
எனும் கவிஞர் வாலியின் வரிகள் இந்த விருதுக்கு எத்தனை பொருத்தம்.

Thursday, 11 September 2014

ஆமை வேக அரசுப் பேருந்தும் அசுர வேக பள்ளி வாகனமும்



ஆமை வேக இரு சக்கர வாகனம் உங்களைப்
பின்தொடர்ந்தே பயணித்ததுண்டா?

சன்னலோர மரங்கள் உங்களை விட்டுப்
பிரிய அடம் பிடித்ததுண்டா?

நொடிக்கொரு முறை நொந்து கொண்டே
கடிகார முற்களைக் கண்டதுண்டா?

அப்படியானால் நீங்கள்
அரசுப் பேருந்தில் பயணித்துள்ளீர்கள்!



ணக்கம் நண்பர்களே! 
பிள்ளைக்கு என்ன ஆச்சு இப்படி கவிதையில பொழம்புதுனு தானே யோசிக்கிறீங்க? அதும் ஒன்னும் இல்லைங்க 
(அப்படினா ரெண்டு மூனு இருக்கும்னு உங்க கம்ப்யூட்டர் மூளை கணக்கு போட்ருக்குமே?)

Monday, 8 September 2014

காதல் கடிதம்

உள்ளுக்குள் பிறப்பெடுத்து தொண்டைக்குள் சிக்கி
ஊமையாய் போன உணர்வுகளை
உரியவளுக்கு உரைத்திடும் உயிர்மொழி...

Tuesday, 26 August 2014

சுதந்திரம் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்!


வலை உறவுகளுக்கு வணக்கம். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணையப்பக்கம் திரும்பியிருக்கிறேன். அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இரண்டு நாட்கள் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சியில் கலந்து கொண்டேன். அங்கு வகுப்பு எடுத்த அன்பு சகோதரர் திரு.மகாசுந்தர் அவர்கள் பகிர்ந்து கொண்ட சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சுதந்திரம் பற்றி ஒவ்வொரு துறையினரும் எவ்வாறு சொல்வார்கள் என்பது பற்றிய திரு.நெல்லை ஜெயந்தா அவர்களின் கவிதை:

Monday, 11 August 2014

யார் யார்க்கு பாரதரத்னா விருது? பாரதரத்னா பற்றிய ஒரு அலசல்

உயரிய விருது
இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி கையினால் விருது
வெண்கலத்தில், அரசமரத்தின் இலை வடிவமும் அதில் ஒரு பக்கம் பிளாட்டினத்தாலான சூரியனும் மறு பக்கம் சிங்கமும் பொறிக்கப்பட்டு, 'பாரத ரத்னா' என்று பழங்கால தேவநகரி மொழியில் எழுதப்பட்டு இருக்கும். வெள்ளை ரிப்பனில் இணைக்கப்பட்ட இந்த விருது, ஜனாதிபதியால் அணிவிக்கப்படும்.

தமிழர்களுக்கு பெருமை
நாடு சுதந்திரமடைந்த பின்பு, 1954ம் ஆண்டில் இந்த விருது ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆண்டில் முதன்முதலாக இந்த பாரத ரத்னா விருதை ராஜாஜி, டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.வி.ராமன் ஆகியோர் பெற்றனர். இந்த மூவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரிய விசயம்.

Tuesday, 22 July 2014

சீறிய ராம்- சமாளித்த விஜய் டிவி



நண்பர்களுக்கு வணக்கம்
நான் அனேகமாக ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் ஆசிய சேனல்களில் முதல் சேனல் உங்கள் விஜய் டிவி என்று ஒரு குதிரை ஓடி வரும். அது தான் அன்று விஜய் டிவிக்கான விளம்பரமாக இருந்தது. தற்போது ஸ்டார் விஜய் டிவியாக மாறியிருக்கிறது. ஸ்டார் விஜய் ஆக உருமாறிய பின்னர் மேற்கத்திய கலாச்சாரத்தை அரிதாரமாக தன் அங்கம் எல்லாம் பூசிக்கொண்டது.அதன் பிறகு விஜய் டிவி தேடிக் கொண்ட விளம்பரங்கள் எத்தனை எத்தனை! இருப்பினும் நல்ல கலைஞர்களை அறிமுகப்படுத்தவும் தயங்கவில்லை.

Sunday, 20 July 2014

நன்றி சொல்லும் நேரமிது

வலைச்சொந்தங்களுக்கு வணக்கம்
நான் மேல குறிப்பிட்டபடி வலை நண்பர்கள் சொந்தங்கள் என்பதை நிருபித்து இருக்கிறார்கள். என் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தியும் தொலைபேசியில் வாழ்த்தியும், மின்னஞ்சல் மூலம் வாழ்த்தியும்,கருத்துரையில் வாழ்த்தியும் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார்கள். நேரமின்மை மற்றும் பணிச்சுமை காரணமாக பல நண்பர்களுக்கு நான் நேரில் சென்று அழைப்பு விடுக்க முடியவில்லை.

Tuesday, 8 July 2014

வாருங்கள்! வாழ்த்துங்கள்!

வலையுலகச் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்!


என் வாழ்நாளின் மகிழ்ச்சியான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன். ஆமாங்க என் திருமணச் செய்தி தான். நாளை 09.07.2014 அன்று விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சுப்பிரமணிய திருமண மகாலில் காலை 9.00- 10.30 மணிக்குள் நடைபெற இருக்கிறது. திருமணம் பெண்வீட்டில் என்பதால் இன்று மாலை மாப்பிள்ளை அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியும் அதே திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. அதன் பின்னர் 13.07.2014 அன்று மாலை 6.15 மணி முதல் மணப்பாறை மஹாலெட்சுமி திருமண மஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அனைவருக்கும் நேரில் வந்து அழைப்பிதழ் கொடுக்க இயலாத சூழ்நிலை நண்பர்கள் அனைவரும் மன்னிக்கவும். இதனையே அழைப்பிதழாக ஏற்றுக் கொண்டு வருகை தந்து எங்களை வாழ்த்தியும் நிகழ்வுகளைச் சிறப்பித்துத் தருமாறு அன்போடு அழைக்கிறேன். என் மகிழ்ச்சியில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்பதே என் விருப்பம். எனவே அருகில் இருக்கும் நண்பர்கள், என் மீது அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் என அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்போடு வேண்டுகிறேன். வருக! வருக! நன்றி! நன்றி!...


இப்படிக்கு,
அ.பாண்டியன்,
மணப்பாறை.
வலைப்பக்கம்: http://pandianpandi.blogspot.com/
மின்னஞ்சல்: pandi29k@gmail.com

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

Tuesday, 24 June 2014

வலைச்சரத்தில் அ.பாண்டியன்


அன்பான வலை உறவுகளுக்கு வணக்கம்.

தங்களின் அன்பான வழிகாட்டலாலும், கருத்துகளாலும், ஊக்கத்தாலும் என் வலைப்பக்கம் விரைவில் ஓராண்டை நிறைவு செய்ய இருக்கிறது. நடைபழகும் சிறுகுழந்தை தான் நான் இன்று வரை.. ஆனாலும் தொடர்ந்து நடக்கிறேன் விழுந்து விட்டால் தாங்கிப் பிடிக்க உங்கள் கரங்கள் தயாராக இருக்கும் எனும் நம்பிக்கையில்...

Saturday, 21 June 2014

உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
வலைப்பக்கம் தந்த நட்பு குடும்ப உறவாக மாறுவது சாத்தியமா! நிச்சயம் சாத்தியம் என்பது எனக்கு ஏற்பட்ட அனுபவம். திரு. கவிஞர் முத்துநிலவன் ஐயா, திரு.மது கஸ்தூரிரெங்கன், திருமதி மைதிலி கஸ்தூரிரெங்கன் இவர்களின் நட்பு வலைப்பக்கத்தில் அரும்பியது. ஆனால் இன்று குடும்பத்தில் ஒருவராக உலா வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் இதை விட நான் சம்பாதிப்பதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது. இவர்கள் நேரடியாக கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும்,  இவர்களைப் போலவே என்னோடு நட்பு பாராட்டும் வலைப்பதிவர்கள் நிறைய. அவர்களும் என் மனதில் சகோதர்களாக, சகோதரிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் இது என்றும் தொடரும்..   அவர்களுக்காவும், இன்னபிற மனதினுள் எதிர்பார்க்கும் நண்பர்களுக்காகவும் இந்த பதிவு.



Wednesday, 18 June 2014

அரிதான தலைவர் கக்கன் அவர்களின் பிறந்த நாள்


வணக்கம் நண்பர்களே! இன்று ஜீன் 18 வாழ்ந்து வரலாறு ஆன எளிமையின் உருவமான திரு.கக்கன் அவர்களின் பிறந்த நாள்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் தோன்றினார் இவர். சேரிப்பகுதியின் கோயிலுக்கு கக்கன் அவர்களின் தந்தை தான் பூசாரி. அந்த கோயிலில் பெருக்கி, சுத்தம் செய்து பூஜையில் ஈடுபடுகிற பழக்கம் கக்கன் அவர்களுக்கு இளம் வயதிலே இருந்தது.

Sunday, 15 June 2014

போலி சாமியார்களும் பொல்லாத சோதிடர்களும்


வணக்கம் நண்பர்களே! ஆத்தா, வீடுகாத்த பேச்சி, ராக்காயி, சீலைக்காரி, பெத்தன்னா, மூலக்கார பாண்டி, அங்காள ஈஸ்வரி, அங்காளம்மா, கங்கங்கம்மா, ஒச்சக்கா..கா... கா ஏய்...... இப்படி கூவி பக்கத்துல இருக்கிறவனை பயமுறுத்திட்ட அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டதுண்டா? தன் பிழைப்புக்காக சாமியர்களும் சோதிடர்களும் அடுத்தவர்களின் வாழ்க்கையில் விளையாடிய கதைகள் ஏராளமாக நம் சமூகத்தில் பரந்து பட்டு இருக்கிறது.

Saturday, 7 June 2014

வாருங்கள்! இது சொர்க்கத்திற்கான அழைப்பு!


இந்த பிரபஞ்சத்தில் வாழும் மனிதர்களில் யாரிடம் சென்று நீங்கள் இறந்தவுடன் சொர்க்கத்துக்கு போக வேண்டுமா? நரகத்துக்கு போக வேண்டுமா? எனும் ஒரு வினாவை முன் வைத்தால் ஏறத்தாழ அனைவரும் விரும்புவது சொர்க்கமாக தான் இருக்கும். சொர்க்கத்தை விரும்புவதில் என்ன தவறு இருக்கிறது அவர்கள் மிகச்சரியாக தானே தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று உங்கள் மனதில் ஒரு எண்ணம் ஓடுவதை நான் அறிவேன். இதோ ஒரு சிந்தனைக்காக ஒரு கதை. வாருங்கள் கதையோடு பயணிப்போம்.

Monday, 2 June 2014

எவன் வைத்த பெயர்?


நாய்குட்டிக்கு ஒரு வாய்
பூனைக்குட்டிக்கு ஒரு வாய்
என பகிர்ந்து உண்ணும் தாய்மை!

வீட்டிற்குள்ளே படுக்கை விரித்தும்
இல்லாத மேற்கூரையின் வழியே
நட்சத்திரங்களோடு பழகும் வாய்ப்பு!

Sunday, 1 June 2014

நண்பனின் அழைப்பு!


கோடை விடுமுறையைக் குதுகலாமாய்
கழித்து விட்டு மீண்டும்
பள்ளி வரும் பாலகனே!

கோடை விடுமுறை உனக்கு
வேண்டுமானால் குளிர்ந்திருக்கலாம்- ஆனால்
எனக்கு கோடை தகித்தது!

Thursday, 29 May 2014

உண்மையில் உலகம் மட்டும் தான் சுருங்கி விட்டதா?


இருபது, முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு கற்பிணி பெண்ணுக்கு இடுப்புவலி வந்து விட்டால் வண்டியைக் கட்டுங்கடா பிள்ளையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லனும் எனும் குரலை கேட்டிருக்கலாம். மாட்டு வண்டி கட்டிகிட்டு நெடுதூரம் பயணம் செய்து தனக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி திரும்பும் கிராமத்துவாசிகளைப் பார்த்திருக்கிலாம். ஆனால் இன்று தெருவின் அடுத்த முனைக்கு செல்வதனாலும் இருசக்கர வாகனம் இல்லாமல் எழுந்திருப்பது இல்லை.

Tuesday, 27 May 2014

ஒரு கதை சொல்லும் பாடம்


நண்பர்களுக்கு வணக்கம். இன்று நாம் ஒரு கதையின் மூலம் ஒரு படிப்பினையை உணர்ந்து கொள்ளப்போகிறோம். கதை என்றால் சொந்தமாக சிந்தித்து எழுதிய கதை இல்லை அப்படி நான் சொந்தமாக சிந்தித்து எழுதினாலும் அதை நீங்கள் கதையாக ஏற்றுக் கொண்டாலே பெரிது. இதில் படிப்பினையை எங்கிருந்து பெறுவது. சரி கதைக்கு வருவோம் அந்த கதை அக்பர் பீர்பால் கதை தான்.

Sunday, 25 May 2014

தொலைந்து போன நதிகள்

இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நதிகள் இன்று இல்லை. மணல் கொள்ளை, தொழிற்சாலைகளின் சாயக்கழிவுகள், நிலச் சுரண்டல்கள் இப்படி நதிகளை அழித்தவிட்ட நிலையில் நதிகள் தொலைந்து போனதும் மட்டுமல்லாமல் இருந்த சுவடுகள் கூட தெரியாமல் போனது வேதனை.

ஹலோ எங்கே தேடுறீங்க? நான் இங்கே இருக்கிறேன்



வணக்கம் நண்பர்களே இன்றைய உலகில் நாம் தொலைத்து விட்டு தேடுவது நிறைய அதில் ஒன்று தான் நமது சந்தோசம். இவற்றை நாம் அடைய யார் யாரிடமோ சென்று நிற்கிறோம். கோவிலில் தேடுகிறோம். கடற்கரை மணலில் சென்று தேடுகிறோம்.  திரைப்பட அரங்கில் தேடுகிறோம். இப்படி எத்தனையோ வழிமுறைகளைக் கையாளுகிறோம். புரியவில்லையா நண்பர்களே! விரிவாகவே கூறுகிறேன்.

Saturday, 24 May 2014

எமது அரசுப்பள்ளியும் தேர்ச்சி விகிதமும்

அரசு உயர்நிலைப்பள்ளி கல்குடி. புதுக்கோட்டை மாவட்டம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சிகல்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 96 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வெழுதிய நாற்பதெட்டு மாணவர்களில் நாற்பத்தாறு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Thursday, 22 May 2014

துன்பத்திற்கு காரணம் ஆசையா?


ஆசை தான் துன்பத்திற்கு காரணமென்று புத்தர் கூறி பல ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் இந்த ஆசை உலக மக்களை விட்டு வெளியேறி விட்டதா! அப்படி வெளியேற எண்ணுபவன் ஆசையே இல்லாமல் நான் வாழ வேண்டும் என்று எண்ணுவதாக எடுத்துக் கொள்வோம். ஆசையை ஒழித்து விட ஆசைப்படுவதாக தானே அர்த்தம். எல்லாம் துறந்த முனிவரிடம் உங்களுக்கு என்ன ஆசை இருக்கிறது என்று கேட்டால் பெரிதாக எனக்கு ஆசை ஒன்றும் இல்லை நான் கண் மூடுவதற்குள் கடவுளை கண்டு விட வேண்டும் என்று கூறுவதாக எடுத்துக் கொண்டால் இது எவ்வளவு பெரிய பேராசை தெரியுமா!

Monday, 19 May 2014

இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறையும் பதிவர்கள் சந்திப்பும்

                               
                           (பயிற்சியில் முதன்மைக்கல்வி அலுவலர் ஐயா)

புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழாசிரியர் கழகம் சார்பாக இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை 17,18.05.2014 (சனி, ஞாயிறு) இரு தினங்களும் நடைபெற்றதை நண்பர்கள் நன்கறிவீர்கள்.


முதல் நாள் நிகழ்வு

திரு. முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் (முதன்மைக் கல்வி அலுவலர்- புதுக்கோட்டை)தலைமையேற்று தொடங்கி வைத்து துவக்கவுரை ஆற்றினார்.
பின்னர் கலந்து கொண்டவர்கள் அறிமுகம் செய்து கொண்டனர். நண்பர்களின் பெயரை சொடுக்கினாலே அவரவர் வலைப்பக்கங்களுக்கு செல்லும் வண்ணம் அமைத்துள்ளேன்.

Friday, 16 May 2014

விதவிதமாக எண்ணெய் தேய்த்து குளிக்கணுமா! இதைப் படிங்க!


தீபாவளிக்கு தீபாவளிதான் பலரும் தலையில் எண்ணெய் வைத்து குளிக்கிறார்கள். ஆனால், வாரந்தோறும் சனிக்கிழமை எண்ணெய் குளியல் போட்டால் உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா? அதனால்தான், ‘சனி நீராடு’ என்று அந்த காலத்திலேயே சொன்னார்கள். நல்லெண்ணெய்யை தலையில் தேய்த்து குளிப்பது மட்டுமே எண்ணெய் குளியல் அல்ல.

இது தான் உலகம் இவ்வளவு தான் வாழ்க்கை


வணக்கம் நண்பர்களே! தேர்தல்களத்தில் ஓட்டு எண்ணிக்கை சூடி பிடித்து இருக்கிறது. எல்லாம் தேர்தல் முடிவுகள் பற்றி பேசி கொண்டு இருக்கும் போது வாருங்கள் நாம் வேறு சில விசயங்களை ரீலாக்ஸா அதே சமயம் தீவிரமா யோசிப்போம்!!

1.என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும் ,ரயிலேறனும்னா ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான்ஆகணும்- இதுதான் வாழ்க்கை.

Wednesday, 14 May 2014

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு- ஒரு பார்வை


குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலேயே (சி.இ.ஓ.) விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த ஒதுக்கீடு குறித்து பெற்றோர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கல்வித் துறை அதிகாரிகள் அளித்த சில விளக்கங்கள்:

Monday, 12 May 2014

வீதி கலை இலக்கிய களம்- மே மாத கூட்டம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் திரு. அருள்முருகன் அவர்களின் ஆலோசனையாலும் கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களின் சீரிய முயற்சியாலும் இயங்கி வரும் வீதி கலை இலக்கிய களம் பற்றி நண்பர்களின் முந்தைய பதிவுகள் மூலம் அறிந்திருப்பீர்கள். 11.05.2014 அன்று நடந்த மே மாத கூட்ட ஒருங்கிணைப்பாளர்களாக நானும் திரு. கவிஞர் மகாசுந்தர் அவர்களும் இருந்தோம். கூட்டம் புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையற்கலை கல்லூரியில் நடைபெற்றது.

Friday, 9 May 2014

நெஞ்சை நெகிழ வைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி



முன்பு ஒரு நாள் திருச்செந்தூரில் விழிப்பார்வை இழந்த சிறுவன் ஒருவனை பிறந்தவுடனே பெற்றோர்கள் கடற்கரையிலே தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர். அவனை ஒரு மனிதர் எடுத்து வளர்த்துள்ளார். அச்சிறுவன் இயல்பிலேயே மனநிலை சரியில்லாதவன். அவனை ஒரு இடத்தில் இருக்க வைப்பது என்பது சாதாரண விசயமில்லை.

Monday, 5 May 2014

தன்னம்பிக்கையை விதைக்கும் நிகழ்வு


நிகழ்வு:

அமெரிக்க கால்பந்து வரலாற்றில் பிரவுன் என்பவர் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார். அவர் ஒரு நாள் களத்திலிருந்து தனது வெற்றிக்கோப்பைகளுடன் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரது முழங்கால் அளவிற்கே இருந்த சிறுவன் அவர் கால்களைச் சுரண்டினான்.

Saturday, 3 May 2014

திண்டுக்கல் லியோனி அவர்களும் நானும் ஒரே மேடையில்


வணக்கம் வலை உறவுகளே!
நீண்ட நாட்கள் அரும்புகள் மலரவில்லை. அடுத்தடுத்த வேலைப்பளுவே காரணம். இப்போது மீண்டும் அரும்புகள் மலர ஆரம்பித்து விட்டது. மலரும் அரும்புகள் உங்கள் மனம் கவரும் மணம் வீசும் நம்பிக்கை இருக்கிறது. என் நலம் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய அன்பான நன்றிகள்.

Monday, 21 April 2014

கலைந்து போகும் நிஜங்கள்!


பருவம் வந்த கன்னிப்பெண் ஆண்மகனுக்கு
கழுத்து நீட்ட காத்திருக்கும் காட்சி போல்
கருக்கருவா கரம் தீண்ட கச்சிதமாய்
கழுத்தைச் சாய்த்து சம்மதிக்கும் நெல்மணிகள்!

Monday, 14 April 2014

தடம் மாறும் இளைஞர்கள் தடுமாறும் தமிழகம்

நிகழ்வு 1

திருச்சியிலிருந்து மதுரை நோக்கி விரைந்து செல்லும் பேருந்து சற்று வேகம் குறைத்து சாலையிலிருந்து விலகி ஒரு கடையில் நிற்கிறது. பேருந்து பத்து நிமிடம் இங்கு நிற்கும் பயணிகள் விரைவாக மது அருந்தி விட்டு வந்து விடுங்கள் என்று அறிவிப்பை நடத்துநர் அறிவித்து விட்டு தனது இலவச மதுவை உண்டு மகிழ சென்று விடுகிறார்

Monday, 7 April 2014

நிஜமாகும் கனவுகள்


கதிரவன் காட்சி தந்த வேளையிலும்
கண்டேனடி நிறைமதியை உன்னுருவில்
நித்தம் நித்தம் என் நினைவோடு
யுத்தம் செய்யும் உம்மை நிஜத்தில் கண்டதும்
நின்றதடி என் இதயம்!

கட்டிய சேலைக்குள் கச்சிதமாய்
நீ பொருந்த உன்னை காண
கிளம்பியதும் என்னோடு பயணித்த
கற்பனை தேவதைகளை விரட்டி விட்டேன்
உன் மலர் முகம் கண்டு!

Friday, 4 April 2014

அரசியல்வாதிகளுக்கு நாம் வழங்கும் சலுகைகள்!


ரேசன் கடைகளில் போடப்படும் விலையில்லா அரிசிக்கும், மண்ணெண்ணெய்க்கும் ஒரு நாள் வேலையை விட்டு விட்டு மணி கணக்கில் காத்திருந்து வாங்கும் மக்கள், மேல்தட்டு மக்கள் ஏளனமாக பார்க்கும் அந்த அரிசியை வைத்து நாட்களை நகர்த்தும் அன்றாடங்காய்ச்சிகள்,  மூன்று வேலை சாப்பாடு  சாப்பிட முடியாத மனிதப்பிறவிகள், போதிய உணவின்றி மடியும் மக்கள், வறுமை காரணமாக எலும்பும் தோலுமாய் பிறக்கும் குழந்தைகள், 36 சதவீதத்தினர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் என நடக்கும் அவலங்கள் நிறைந்த இந்த பாரத திருநாட்டில் தான் ஒரு தரப்பினர் நமக்கு ஊழியம் செய்தவதாக கூறிக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர், அவர்கள் தான் நமது அரசியல்வாதிகள். ஓட்டு வாங்க வரும் போது உங்கள் தொண்டன் என்று கூறி விட்டு மக்கள் பிரதிநிதி என்பதையே மறந்து விட்டு நிதிகளைச் சேர்ப்பதே கொள்கையாகக் கொண்ட, நம்மூர் அரசியல்வாதிகளுக்கு நாம் தரும் சலுகைகள் என்னென்ன என்பது தெரியுமா!

Thursday, 3 April 2014

ரூபன் மற்றும் பாண்டியன் நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவுகள் வெளியீடு


வணக்கம் நண்பர்களே! ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவுகள் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இதில் பங்கேற்று சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும், பரிசு பெற்ற நண்பர்களுக்கும் எங்கள் உளப்பூர்வமான நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். பல்வேறு பணிகளுக்கு இடையிலும் நடுவர்களாக இருந்து நடுநிலையுடன் சிறப்பான முடிவுகளை அறிவித்த நடுவர்கள்

Tuesday, 1 April 2014

இந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல?


நண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக  சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. படத்தின் கருத்து என்னைக் கொஞ்சம் புருவம் உயர்த்தி பார்க்க வைத்தது. வழக்கமான படம் போல் இல்லாமல் மாறுபட்டதாய் இருந்தது. ப்டத்தின் கதையைச் சொல்லி விமர்சனம் செய்வதற்காக இல்லை இந்த பதிவு, நல்ல கருத்துக்களைச் சொன்னால் ஓடாத படங்கள் வரிசையில் இந்த படமும் இடம் பிடுத்து விட்டதோ என்ற ஆதங்கத்தில் படத்தின் கருத்தைப் பகிர்கிறேன். நல்ல படமா? இல்லையா? என்பதை நீங்களே சொல்லுங்கள்..
சிலையும் நீயே   சிற்பியும் நீயே உன்னை நீ சரி செய்து கொள்     உலகம் தானாக சரியாகி விடும் 

Sunday, 23 March 2014

உயிரைக் கட்டணமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள்


பள்ளி கட்டணம் செலுத்தாததால், வகுப்புக்கு வெளியே நிறுத்தி வகுப்பு ஆசிரியர் அவமானப்படுத்தியதால், மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். மணலி சிபிசிஎல் நகர் 9வது தெருவை சேர்ந்தவர் மாறன். கூலி தொழிலாளி. இவரது மனைவி பொற்கொடி. இவர்களது மகள் பூஜா (13). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். 3 மாதத்துக்கு ஒரு முறை கட்டவேண்டிய, பள்ளி கட்டணத்தை பூஜா செலுத்தவில்லை பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் இச்சோகமான சம்பவம் நடந்துள்ளது எனும் செய்தி கேட்டு மனம் பதைபதைக்கிறது. பிஞ்சு குழந்தைகளைத் தற்கொலைக்குத் தூண்டும் கல்வி முறை இன்னமும் நமக்கு வேண்டுமா! எல்லாமும் இலவசமாக கொடுக்கும் இந்த அரசாங்கம் கல்விக்கும் மருத்துவத்தும் அதிகப்படியான பணம் வசூலிக்க அனுமதிப்பது எவ்வளவு முரணாக உள்ளது என்பதை சிந்திக்கையில் ஆட்சியாளர்களின் மீது அவநம்பிக்கையைத் தான் ஏற்படுத்துகிறது.