வலையுலகச் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்!

என் வாழ்நாளின் மகிழ்ச்சியான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன். ஆமாங்க என் திருமணச் செய்தி தான். நாளை 09.07.2014 அன்று விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சுப்பிரமணிய திருமண மகாலில் காலை 9.00- 10.30 மணிக்குள் நடைபெற இருக்கிறது. திருமணம் பெண்வீட்டில் என்பதால் இன்று மாலை மாப்பிள்ளை அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியும் அதே திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. அதன் பின்னர் 13.07.2014 அன்று மாலை 6.15 மணி முதல் மணப்பாறை மஹாலெட்சுமி திருமண மஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அனைவருக்கும் நேரில் வந்து அழைப்பிதழ் கொடுக்க இயலாத சூழ்நிலை நண்பர்கள் அனைவரும் மன்னிக்கவும். இதனையே அழைப்பிதழாக ஏற்றுக் கொண்டு வருகை தந்து எங்களை வாழ்த்தியும் நிகழ்வுகளைச் சிறப்பித்துத் தருமாறு அன்போடு அழைக்கிறேன். என் மகிழ்ச்சியில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்பதே என் விருப்பம். எனவே அருகில் இருக்கும் நண்பர்கள், என் மீது அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் என அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்போடு வேண்டுகிறேன். வருக! வருக! நன்றி! நன்றி!...
இப்படிக்கு,
அ.பாண்டியன்,
மணப்பாறை.
வலைப்பக்கம்: http://pandianpandi.blogspot.com/
மின்னஞ்சல்: pandi29k@gmail.com
கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!
|