அரும்புகள் மலரட்டும்: January 2015

Thursday, 29 January 2015

மாணவர்களின் கைகளில் தவழும் இணைய தளங்களும் ஆபாச படங்களும்


வளர்ந்து வரும் நவீன உலகத்தில் வளர்ந்து வரும் இன்றைய குழந்தைகள் பெற்றோர்களை விட நுண்ணறிவிலும் அதி நவீன பொருட்களைக் கையாளுவதிலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். பெரியவர்களுக்கே கையாளத் தெரியாத அலைபேசிகள் குழந்தைகள் கைகளில் என்ன பாடு படுகிறது தெரியுமா! அதை அப்படியே பிரித்து மேய்ந்து விடுகிறார்கள் இன்றைய சுட்டிக் குழந்தைகள். இவர்களின் வயதில் நாம் இருக்கும் போதெல்லாம் நல்லது எது கெட்டது என்பதைக் கூட நம் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தால் தான் புரியும்.

Monday, 26 January 2015

உலக வரலாற்றில் ஒரு மொழிப் போர்- தி இந்து-கட்டுரை

சென்னை நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம் பாக்கம் சிவலிங்கம், விருகம் பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி...

Sunday, 25 January 2015

உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா?

NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.

Friday, 23 January 2015

மாதொருபாகனும் மகாபாரதமும் ( திரு. சுப.வீரபாண்டியன் அவர்களின் பதிவு)

படைப்புச் சுதந்திரம் எதுவரை நீளலாம் என்னும் வினாவிற்கு உடனடி விடை ஏதுமில்லை என்றாலும், அடுத்தவர் சுதந்திரத்தைப் பாதிக்காத வரை அல்லது பொது ஒழுங்கைக் கெடுக்காத வரை என்ற விடையே பெரிதும் கூறப்படுகின்ற ஒன்றாகும்! எனினும்,அடுத்தவர் சுதந்திரம் என்பது எதுவரை அல்லது பொது ஒழுங்கு என்றால் என்ன, அதனை யார் தீர்மானிப்பது என்னும் வினாக்கள் எழும்போது, மீண்டும் முதல் வினா விடையற்றே நிற்கிறது. எவ்வாறாயினும், படைப்புச் சுதந்திரத்திற்கு எந்த எல்லையும் கிடையாது என்னும் கூற்றில் நம்மால் உடன்பட முடியவில்லை. அது பற்றிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றே தோன்றுகிறது.

Tuesday, 20 January 2015

38 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி- படப்பதிவு

கல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை


அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம்.
நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலக அளவில் 'கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும் அதே பின்லாந்துதான்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட
நிலையில் இருந்தாலும் அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில்
பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.

Sunday, 18 January 2015

அரசின் உதவியோடு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் கொள்ளைகள்

அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..? முடியும்..!!

Sunday, 11 January 2015

பத்திரிகையாளன் பாரதி - தினமணி கட்டுரை

வலை உறவுகளுக்கு வணக்கம்
இணையத்தில் உலாவிய பொழுது 2012 செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் செங்கோட்டை ஸ்ரீராம் அவர்கள் எழுதிய தினமணி கட்டுரை ஒன்று படித்தேன். அது மிகவும் என்னை மிகவும் கவர்ந்தது. உங்களுக்கும் பிடிக்குமென்பதால் அப்படியே வரி மாறாது பதிவிடுகிறேன்.

Saturday, 10 January 2015

மறை நீர் பொருளாதாரம் - ஓர் அலசல்

மறை நீர் (Virtual water) என்பது ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் ஆகும். அந்த பொருளை உருவாக்குவதற்கு தேவைப்படும் நீர் தான் மறை நீர். மறை நீர் வணிகம் என்பது ஒரு பொருளாதார தத்துவம் ஆகும்.

Wednesday, 7 January 2015

மரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்!

வலை உறவுகளுக்கு வணக்கம்

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
மழைத்துளி உயிர்த்துளி
கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும்
து போன்ற வாசகங்களை ஆண்டாண்டு காலமாக கண்டிருக்கிறோம் ஆனாலும் மரம் வளர்ந்த பாடில்லை மழை வந்த பாடில்லை காரணம் யாருக்கோ சொல்வதாக மக்கள் நினைத்துக் கொள்கிறார்கள். மரம் வளர்ப்பின் பயன்களை முழுமையாக உணரத் தவறியதன் விளைவு உலக வெப்பமயமாதல். உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களில் முதன்மையானதாக உலக வெப்பமாதல் இருக்கிறது

Monday, 5 January 2015

சேரனின் சினிமா டு கோம்- திருட்டு விசிடிகளை ஒழித்து விடுமா/


புதுபடங்களை டி.வி.டி மூலம் வீடுகள் தோறும் விநியோகம் செய்யும் புதுதிட்டத்தை துவங்கியுள்ளார். இதற்கு ‘சினிமா டூ ஹோம்’ என்று பெயர் வைத்துள்ளார். வீடுகளுக்கு புதுபடங்களை நேரடியாக 50 ரூபாயில் கொண்டு செல்லும் வகையில் இத்திட்டம் தயாராகியுள்ளது.

Sunday, 4 January 2015

சகத்தினை அழித்திடலாமா?


கோவில்கள், பேருந்து நிலையங்கள், சாலையோரங்கள் என இப்படியாக எங்கு காணினும் கையேந்தும் பிச்சைக்காரர்கள் நிறைந்த இந்த பாரத திருநாட்டில் (குறிப்பாக தமிழ்நாட்டில்) வறுமை ஒழிக்கப்பட இன்னும் எத்தனை காலங்கள் ஆகும்? அனுமானமாக கூட யோசித்துப் பார்க்க முடியாத நிலையில் தானே இன்றிருக்கிறோம். வறுமையை ஒழிக்க வேண்டும் என்று 1951 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் இலக்கு வைக்கப்பட்டு இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.