அரும்புகள் மலரட்டும்: August 2014

Tuesday, 26 August 2014

சுதந்திரம் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்!


வலை உறவுகளுக்கு வணக்கம். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணையப்பக்கம் திரும்பியிருக்கிறேன். அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இரண்டு நாட்கள் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சியில் கலந்து கொண்டேன். அங்கு வகுப்பு எடுத்த அன்பு சகோதரர் திரு.மகாசுந்தர் அவர்கள் பகிர்ந்து கொண்ட சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சுதந்திரம் பற்றி ஒவ்வொரு துறையினரும் எவ்வாறு சொல்வார்கள் என்பது பற்றிய திரு.நெல்லை ஜெயந்தா அவர்களின் கவிதை:

Monday, 11 August 2014

யார் யார்க்கு பாரதரத்னா விருது? பாரதரத்னா பற்றிய ஒரு அலசல்

உயரிய விருது
இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி கையினால் விருது
வெண்கலத்தில், அரசமரத்தின் இலை வடிவமும் அதில் ஒரு பக்கம் பிளாட்டினத்தாலான சூரியனும் மறு பக்கம் சிங்கமும் பொறிக்கப்பட்டு, 'பாரத ரத்னா' என்று பழங்கால தேவநகரி மொழியில் எழுதப்பட்டு இருக்கும். வெள்ளை ரிப்பனில் இணைக்கப்பட்ட இந்த விருது, ஜனாதிபதியால் அணிவிக்கப்படும்.

தமிழர்களுக்கு பெருமை
நாடு சுதந்திரமடைந்த பின்பு, 1954ம் ஆண்டில் இந்த விருது ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆண்டில் முதன்முதலாக இந்த பாரத ரத்னா விருதை ராஜாஜி, டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.வி.ராமன் ஆகியோர் பெற்றனர். இந்த மூவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரிய விசயம்.