அரும்புகள் மலரட்டும்: November 2019

Saturday, 23 November 2019

யாதுமானவள்


விழியில் வைத்துக்கொண்டு
வழியெல்லாம் தேடுகிறேன் உன்னை !
அழுது விடாதே கரைந்து
விடுவேனென ஆறுதல் சொல்கிறாய்!

உன் நினைவுகளில் மூழ்கி
மூச்சடைத்து போகிறேன்!
உன் சுவாசக்காற்று
என்னை மீட்டெடுக்கிறது!

Monday, 18 November 2019

பெருந்தமிழர் தியாகி சங்கரலிங்கனார்

1956 அக்டோபர் 10 ஆம் தேதி மதுரை எர்ஸ்கின் மருத்துவமனை வழக்கத்துக்கு மாறாக பரபரப்பில் மூழ்கியிருந்தது. ஒரு நாள் அல்ல இரண்டு நாள்கள் அல்ல 76 நாள்கள் உண்ணவிரதம் இருந்து மோசமான உடல்நிலையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டதே அந்தப் பரபரப்புக்குக் காரணம். தொடர்ந்து மூன்று நாள்களாக போராடிய மருத்துவர்களின் போராட்டத்திற்குப் பலன் இல்லாமல் அந்த உயிர் 1956 அக்டோபர் 13 ஆம் தேதி பிரிந்தது.

அறிஞர் அண்ணா, காமராசர், ம.பொ.சிவஞானம், ஜீவானந்தம் உட்பட பல தலைவர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டும் உண்ணாவிரத்தைக் கைவிடாது தீரத்தோடு போராடி தன் இன்னுயிரைத் துறந்து, இன்றுவரை சாகும்வரை உண்ணாவிரதம் என்னும் சொல்லுக்கு உதாரணமாய், கொண்ட கொள்கையில் துளியளவுகூட சமரசம் செய்து கொள்ளாமல் போராடிய அந்த போராளிதான் தியாகி சங்கரலிங்கனார்.