அரும்புகள் மலரட்டும்: 2019

Saturday, 23 November 2019

யாதுமானவள்


விழியில் வைத்துக்கொண்டு
வழியெல்லாம் தேடுகிறேன் உன்னை !
அழுது விடாதே கரைந்து
விடுவேனென ஆறுதல் சொல்கிறாய்!

உன் நினைவுகளில் மூழ்கி
மூச்சடைத்து போகிறேன்!
உன் சுவாசக்காற்று
என்னை மீட்டெடுக்கிறது!

Monday, 18 November 2019

பெருந்தமிழர் தியாகி சங்கரலிங்கனார்

1956 அக்டோபர் 10 ஆம் தேதி மதுரை எர்ஸ்கின் மருத்துவமனை வழக்கத்துக்கு மாறாக பரபரப்பில் மூழ்கியிருந்தது. ஒரு நாள் அல்ல இரண்டு நாள்கள் அல்ல 76 நாள்கள் உண்ணவிரதம் இருந்து மோசமான உடல்நிலையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டதே அந்தப் பரபரப்புக்குக் காரணம். தொடர்ந்து மூன்று நாள்களாக போராடிய மருத்துவர்களின் போராட்டத்திற்குப் பலன் இல்லாமல் அந்த உயிர் 1956 அக்டோபர் 13 ஆம் தேதி பிரிந்தது.

அறிஞர் அண்ணா, காமராசர், ம.பொ.சிவஞானம், ஜீவானந்தம் உட்பட பல தலைவர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டும் உண்ணாவிரத்தைக் கைவிடாது தீரத்தோடு போராடி தன் இன்னுயிரைத் துறந்து, இன்றுவரை சாகும்வரை உண்ணாவிரதம் என்னும் சொல்லுக்கு உதாரணமாய், கொண்ட கொள்கையில் துளியளவுகூட சமரசம் செய்து கொள்ளாமல் போராடிய அந்த போராளிதான் தியாகி சங்கரலிங்கனார்.

Tuesday, 22 October 2019

விழிமின்

Wakeup
நன்றி: கூகுள்
வனம் அழித்து வான்மழை இழந்தாச்சு
புல் பூண்டையெல்லாம் காயும்
வெயிலுக்குக் காவு கொடுத்தாச்சு!

ஆறு ஏரி குளம் குட்டைகளையெல்லாம்
ஆரறிவு அலப்பறையால் அழித்தாச்சு
கொஞ்சமிருந்த நீரையும் குடுவைக்குள் அடைத்து விலைபேசி வித்தாச்சு!

Thursday, 17 October 2019

புதுக்கோட்டை இணையப் பயிற்சி முகாம்- 2019


புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம், வீதி இலக்கிய களம் நடத்திய இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் புதுக்கோட்டை ஜே.ஜே கல்லூரியில் அக்டோபர் 12,13 ஆகிய 2 தேதிகளில் நடைபெற்று முடிந்திருக்கிறது. அப்பயிற்சியில் நானும் கலந்து கொண்டேன் என்பதில் பெரு மகிழ்வு.மணப்பாறையில் இருந்து புதுக்கோட்டைக்கு நானும் அண்ணா ரவி ஐயா அவர்களும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துக் கல்லூரியைச் சென்றடைந்தோம். வளாகத்திற்குள் நுழைந்ததும் பயிற்சி நடைபெறும் இடத்திற்கு அம்புக் குறியிட்ட பதாகை நம் விரல் பிடித்து அழைத்துச் செல்லும் வண்ணம் ஒட்டப்பட்டிருந்தது.

Tuesday, 27 August 2019

புதிய மனிதன்


சான்றோர் அருகில் வந்து நில் என்றார்கள்
தன் தகுதி அறிந்து
கால்களிரண்டும் தந்தி அடித்தது!

பொதுமேடை பேசு என்றார்கள்
உனக்கேன் இந்த வேலையென்று
ஒலிவாங்கி ஓங்கி அறைந்தது!