அரும்புகள் மலரட்டும்: December 2013

Tuesday, 31 December 2013

சூமாக்கருக்கு நடந்தது என்ன? குணமடைய பிரார்த்திப்போம்!


பனிச்சறுக்கில் ஈடுபட்ட போது தலையில் பலத்த காயமடைந்த முன்னாள் ‘பார்முலா–1’ கார்பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கர், ஆபத்தான நிலையில் ‘கோமாவில்’ உள்ளார்.

ஜெர்மனியின் முன்னாள் ‘பார்முலா–1’ கார் பந்தய வீரர் சூமாக்கர், 44. மொத்தம் 7 முறை (1994, 1995, 2000 முதல் 2004 வரை) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த 2006ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 2010ல் மீண்டும் ‘பார்முலா–1’ போட்டிக்கு திரும்பினார்.

Thursday, 26 December 2013

மழலை மாறாத வயதில் மன அழுத்தம் : ஏங்கும் பிஞ்சு குழந்தைகள்


"மழலை மறக்காத வயதில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதால், பெற்றோர்களின் ஆதரவு கிடைக்காமல், மனதளவில் வன்முறை வலைக்குள் குழந்தைகள் சிக்குவதாகவும் மன அழுத்ததிற்கு ஆளாவதாகவும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Monday, 23 December 2013

தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டிக்கு 19 நாள்களே உள்ளன

தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டி


வணக்கம் நண்பர்களே... இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தை தாய்வீடாக கொண்ட எனது இனிய நண்பர், தற்சமயம் மலேசியாவில் வசிக்கும் திரு. த.தவரூபன்(ரூபன்) அவர்களும், மணப்பாறையைச் சேர்ந்த தமிழாசிரியர் திரு. அ.பாண்டியன் என்கிற நானும் இணைந்து நடத்தும், தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள அழைக்கிறேன் நட்பு உள்ளங்களே...

Friday, 20 December 2013

செல்போனால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்


செல்போனால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்

தற்போது செல்போன் இல்லாத கைகளை பார்க்கவே முடியாது. ஏனேனில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் செல்போன் இருப்பதை காணலாம்.

Wednesday, 18 December 2013

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரி பாடல்!


நண்பர்களுக்கு வணக்கம்
பள்ளி மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக பாரத சாரணர்- சாரணியர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு 8 நாள்கள் பயிற்சி எடுத்து வருகிறேன். அதற்கிடையில் திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடலைப் படித்தேன். அதை தங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பாடல் பற்றிய மாற்றுக் கருத்துகள் தங்களுக்கு இருந்தால் அன்போடு கருத்துரையில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..

Sunday, 15 December 2013

அலட்சியமாகும் சாலை விதிகள்


வணக்கம் நண்பர்களே
இன்று மாலை நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டு வீடு திரும்புகையில் விராலிமலையில் சாலையில் ஒரே கூட்டமாக இருந்தது. நானும் எனது நண்பர்கள் இருவரும் என்னவென்று சென்று பார்க்கையில் விபத்து நடந்துள்ளது விபத்தில் அடிபட்டவர் சுமார் 38 வயது மதிக்கத்தக்கவரும் எட்டாம் வகுப்பு படிக்கும் அவரது மகளும் விபத்துக்குள்ளாகி உள்ளனர். கூடி நின்ற கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

Friday, 13 December 2013

படித்தவர்கள் தான் தவறு செய்கிறார்களா?


தவறு செய்யாத மனிதர்களே இன்றைய உலகில் இல்லை என்கிற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி என்றால், யார் நம்மை வழிநடத்த இருக்கிறார்கள்? தவறு செய்திருந்தாலும் திருந்தி வாழ்பவர்களை இந்த உலகம் மதிக்கிறது.

இன்றைய சூழலில் பெரும்பாலான நாச வேலைகளைச் செய்வது யாரென்று பார்த்தால் அது படித்தவர்கள் தான் என்னும் புள்ளிவிவரம் நம்மை அச்சுறுத்துகிறது. காரணம் இன்றைய கல்வி முறையும் சூழ்நிலையும் தான் அவனை இப்படி மாற்றுகிறது. பொதுவாக ஒரு சமூதாயம் வளர்ச்சியுற்றதாக இருக்க வேண்டும் என்றால் இரண்டு விடயங்கள் தான் காரணமாக அமைகின்றன 1.சமுதாயத்தை ஆளும் தலைவன்
2. இளைய சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்கள்.

Tuesday, 10 December 2013

புதியன படைத்திடுவோம்


வாழ்க்கையெனும் கடலில் சூழல்
நம்மை மூழ்கடிக்கலாம்-மூச்சடக்கி
முத்தெடுத்து மீண்டு(ம்) வருவோம்!

பயணிக்கும் பாதையின் தடங்கள்
படக்கென்று மறையலாம்- புதிய
தடம் நாம் பதிப்போம்!

Sunday, 8 December 2013

முன்னேறு தோழா!



நம்மால் முடியுமா என்று எண்ணாதே!
நம்மால் தான் நாளைய பொழுது
விடியுமென்று வீறுநடைபோடு!


எனக்கு மட்டுமேன் இப்படி நடக்கிறதென
துவண்டு போகாதே
உனக்கு மட்டுமே இந்த மாவுலகம்
உயிர் பெற்றதாய் எண்ணம் கொள்!

Monday, 2 December 2013

பொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…


வணக்கம் நண்பர்களே!
பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூபன் அவர்களும் நானும் இணைந்து மாபெரும் கட்டுரைப்போட்டியை நடத்த இருக்கிறோம் என்பதை தங்களுக்கு அன்போடு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.