அரும்புகள் மலரட்டும்: 2015

Friday, 11 December 2015

போராடிய திருச்சி சிவா அவர்களுக்கு பாராட்டுகள்

வரலாறு காணாத மழையால் பாதித்துள்ள தமிழகத்தை கருத்தில் கொண்டு, அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வைக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை பிரதமரிடம் வைக்க கடுமையாக போராடியுள்ளார் திருச்சி சிவா.

Friday, 4 December 2015

இயல்பு நிலை திரும்பட்டும்.

வணக்கம் நண்பர்களே!
வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா 2015 முடிந்தவுடன் சகோதரர் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்து மழையில் மாட்டிக் கொண்டு அவரை மட்டும் பேருந்தில் அனுப்பி விட்டு நான் சுமார் 1.30 மணி நேரம் காத்திருந்தும் மழை நிற்காததால் நனைந்து கொண்டே வீடு சென்ற தருணமே எனக்கும் வலைப்பதிவர்களுக்குமான கடைசி சந்திப்பாக வெகு நாட்களாக இருந்து வந்தது.

Sunday, 11 October 2015

வலைப்பதிவர் திருவிழா பகுதி 2

  • கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

பதிவர் திருவிழா 2015 நேரலை



 கண்டு களித்தமைக்கு நன்றி...!

Sunday, 4 October 2015

படிவம் நிரப்புங்க! பணத்தை அள்ளுங்கள்!

செய்ய வேண்டியது என்ன?

http://bloggersmeet2015.blogspot.com/ எனும் இணைய தளத்திலிருக்கும் “போட்டிக்கு வந்த படைப்புகளை“ படித்துவிட்டு, “இந்தப் போட்டியில் இவர்கள்தான் பரிசு பெறுவார்கள்” என ஐந்து போட்டிகளுக்கும், போட்டிக்கு மூவர் வீதம் 15பேரைத் தேர்வுசெய்யவேண்டும். முதல்பரிசு இவர், இரண்டாம் பரிசு இவர், மூன்றாம் பரிசு இவர்தான் என்று ஐந்து போட்டிகளுக்கும் கருத்துத் தெரிவித்தால் போதும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bloggersmeet2015@gmail.com

Friday, 2 October 2015

ஆஹா! அழைப்பிதழ் வந்தாச்சு! வருக வருக நண்பர்களே!

















ஆஹா! மனம் ஆனந்தத்தில் கூத்தாடுகிறது, புதுக்கோட்டை நகரம் மட்டுமல்ல இணைய நண்பர்களின் இல்லங்கள் தோறும் விழாக் கோலம் பூண்டிருக்கிறது. இணையத்தில் சந்தித்து இதயத்தில் இடம் பிடித்த அத்தனை உறவுகளை ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சந்திக்க இருக்கிறோம் என்றால் இல்லங்கள் மட்டுமல்ல உங்களின் உள்ளங்களும் எண்ணங்களும் புதுகையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை நானறிவேன். இனி என்ன இதோ அழைப்பிதழ் வந்தாச்சு. இணைய வாயிலாகவும், அஞ்சல் வாயிலாகவும் அழைப்பிதழ் உங்களின் இல்லத்து வாசலை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. மின்னஞ்சல் எல்லாம் உங்களது மைக்ரோ சாப்ட் (விண்டோஸ்) சன்னலில் வழியே எகிறி குதித்து உங்களை இருகரம் கூப்பி அழைத்துக் கொண்டிருக்கிறது.

Thursday, 1 October 2015

சுற்றுச்சூழலைக் காப்போம்! சுகமாய் வாழ்வோம்!


அறிவியல் யுகத்தில் காலச்சக்கரம் கடுமையாகச் சுழன்றுக் கொண்டிருக்கிறது, உலகம் உள்ளங்கையில் சுருங்கியிருக்கிறது. கூடவே நம் சூழலும் பாலாகியிருக்கிறது. நீர், நிலம், காற்று என அனைத்தையும் மாசடையச் செய்திருக்கிற பெருமை நம்மையே சாரும். உலகம் வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. கமழி அடுக்கு(ஓசோன் மண்டலம்)மெல்லியதாகிப் போகியிருக்கிறது, சுத்தமான காற்றுக்கு ஆக்ஸிஜன் செண்டருக்கு அலைந்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம், துருவப்பணி பாறைகளெல்லாம் உருகி கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது.நெகிழியைப் பயன்படுத்தி பற்பல நோய்களோடு இலவசமாக இணைந்திருக்கிறோம். இயற்கையைக் காக்க தவறியிருக்கிறோம். இனி மேலும் விழித்துக் கொள்ளா விட்டால் அடுத்த தலைமுறை தான் என்னவாகுவது?.

Wednesday, 30 September 2015

பழசாகும் பண்பாட்டைக் காக்கணுங்க!


உலகம் தான் வளர்ந்திருக்கு மனசனுங்க
மனசெல்லாம் சுருங்கிருக்கு – முதியோர்
இல்லமெல்லாம் நிரம்பி வழிந்திருச்சு!

Tuesday, 29 September 2015

பெண்மையே படி தாண்டு!


தாய் தந்தைக்கு நல்ல மகளாய், உடன் பிறந்தோர்க்கு பாசமுள்ள சகோதரியாய், நண்பர்களுக்கு நல்லதொரு தோழியாய், கணவனுக்கு அன்பு மனைவியாய், தம் பிள்ளைகளுக்கு பாலூட்டி, சீராட்டி வளர்க்கும் அன்பே உருவான தாயாக, புகுந்த வீட்டிற்கு பொறுப்புள்ள மருமகளாக, பேரக்குழந்தைகளுக்கு வழிகாட்டும் பாட்டியாய் தனது வாழ்க்கையில் பல பரிமானங்களைப் பெறும் பெண்மையை மென்மையாக நடத்தி போற்ற வேண்டியது மட்டுமல்ல காக்க வேண்டியதும் இச்சமூகத்தின் கடமை.

Sunday, 27 September 2015

நரேந்திர மோடி ஏன் உலகை கவர்கிறார்... தெரியாத சில ரகசியங்கள்!

உலகளவில் அமெரிக்க அதிபர் ஒபமாவுக்கு பிறகு சமூக வலைதளங்களில் அதிகம் பேர் பின்தொடரும் நபராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். தகவல் தொடர்பு நிறுவனங்களின் உலகத் தலைநகராக கருதப்படும் சிலிக்கான் வேலியே அவரது வருகையால் சிலிர்த்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். உலக நாடுகளில் மோடிக்கு ஏன் இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்றால் அதில் சில ரகசியங்களும் அடங்கியிருக்கிறது.

Thursday, 24 September 2015

தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்போம்! வாருங்கள் புதுக்கோட்டைக்கு!

`அப்பப்பா என்னா என்னா வெயிலு வீட்டை விட்டு நாலு எட்டு வைத்தாலே வாட்டி வதைக்குதடா மனிசனே! மண்டையெல்லாம் கிறுகிறுனு சுத்துதடா எப்பதான் இந்த வெயிலு குறையப் போகுது`  என்று புலம்பித் தீர்ப்பவர்களிடம் அடே ஞானசூனியங்களா மரத்தையெல்லாம் வெட்டிப்புட்டு இப்படி புலம்புறதுல என்னடா நியாயம் இருக்குனு அவங்க நடு மண்டைல நச்சுனு உரைக்கிற மாதிரி நீங்க சொல்லனும்னு ஆசைப் படுகிறீர்களா!

Tuesday, 22 September 2015

தமிழால் இணைந்திடுவோம்! புதுக்கோட்டை வாரீர்!


பாண்டியரும் களப்பிரரும்
களம் கண்ட கோட்டை
பல்லவர்களோடு முத்திரையர்கள்
வெற்றி முகம் பதித்த கோட்டை


Saturday, 19 September 2015

வைகோ நல்ல தலைவர் தான்.ஆனால்? - விகடனின் ஓர் அலசல் ரிப்போர்ட்!

அரசியல் கட்சி உருவாக பல காரணங்கள் இருக்கலாம் அல்லது தேவைப்படலாம். ஆனால், கட்சி உடைவதற்கு ஒரு சில காரணங்கள் போதும். பெரும்பாலான சமயங்களில் ஒரே ஒரு காரணமே கட்சி உடைவதற்கு காரணமாக இருந்து விடுகிறது. எதிலும், சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற தலைவர்களின் முனைப்புதான் கட்சிகள் பிளவை சந்திக்க காரணமாக அமைகிறது. தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கினால் இதனை நாம் உறுதி செய்துகொள்ள முடியும்.

Sunday, 13 September 2015

புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் திருவிழா 2015 - கையேடு வழங்கும் திட்டம் படைப்பாளிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கான அச்சாரம்.


வலை உறவுகளுக்கான வணக்கம். அனைவரும் நலம் தானே? அதான் நேரிலே சந்திக்க இருக்கோமே அதுக்குள்ள என்ன நலம் விசாரிப்பு என்று தானே கேட்கிறீர்கள்? அதுவும் சரி தான். இன்னும் 27 நாட்களில் நாமெல்லாம் புதுக்கோட்டையில் சங்கமிக்க இருக்கிறோம். அந்த நாளை நினைக்கையில் இதுவரைக் காணாத தூரத்துச் சொந்தங்களை எல்லாம் ஒரே இடத்திம் ஒரே நாளில் சந்திக்க இருக்கிறோம் எனும் உவகை மரத்தில் கட்டிய தொட்டிலென அங்கும் இங்கும் மனதில் ஊஞ்சலாடுகிறது. அனைவரும் வர வேண்டுமென்பதே என் அவா.

புதுக்கோட்டை நண்பர்கள் விழா சிறப்பாக நடைபெற கவிஞர். முத்துநிலவன் அவர்களின் தலைமையில் அனைத்து ஆயத்தப் பணிகளைச் செய்து கொண்டு காலில் சக்கரம் கட்டியது போல சுழன்றுக் கொண்டிருக்கிறார்கள். விழாவின் சிறப்பம்சமாக பதிவர் கையேடு தர இருப்பது கவிஞர் முத்துநிலவன் அய்யா அவர்களின் சிந்தையில் தோன்றிய சிறப்புமிக்க திட்டம். முதலில் அவருக்கு நமது நன்றிகள்.

Saturday, 12 September 2015

தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்


வணக்கம் நண்பர்களே! அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல்லாத வேறு தகவல்களைச் சொல்லலாம் என்பதற்காக இணையத்தில் உலாவி சேகரித்த தகவல்கள் உங்களுக்கும் உதவும் எனும் நம்பிக்கையில் பதிவிடுகிறேன்.

Saturday, 5 September 2015

சபாஷ்! குஷ்பு அவர்களே! சபாஷ்!


தம்மை பெரியாரிஸ்ட் என்று பிரகடனப்படுத்தி வரும் நடிகை குஷ்பு டுபாக்கூர் கார்ப்பரேட் சாமியார்களைப் பற்றி உண்மை முகங்களை தோலுரித்துக் காட்டியுள்ளார். நக்கீரன் வாரமிருறை இதழில் நடிகை குஷ்பு 'லாபம் கொழிக்கும் காவி உடை' என்ற தலைப்பில் எழுதியுள்ளதாவது:

Sunday, 30 August 2015

தனி ஒருவன் -விமர்சனம்

நடிகர்கள் : ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி, தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராமன், நாசர், சஞ்சனாசிங், வம்சிகிருஷ்ணா
இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா’ ஆதி
ஒளிப்பதிவு : ராம்ஜி
இயக்கம் : மோகன் ராஜா
தயாரிப்பாளர் : ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்

Monday, 17 August 2015

வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா 2015 - புதுக்கோட்டை- அனைவரும் வருக!


புதுக்கோட்டை வரலாறு:
புதுக்கோட்டை என்பது புதியக் கோட்டை எனப் பொருள்படும். 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டைமான் ரகுநாதா என்பவரால் ஒரு புதிய கோட்டை கட்டப்பட்டு, புதுக்கோட்டை எனப் பெயரிடப்பட்டது. இம்மாவட்டம் பரப்பளவில் சிறிது என்றாலும், வரலாறு, சிற்பம், ஓவியம், ஏனைய கலைகள் மற்றும் கனிம வளம் போன்ற சிறப்புக்களால் பெருமைப் பெற்ற மாவட்டமாகத் திகழ்கிறது.

Sunday, 16 August 2015

அப்துல் கலாமின் நினைவுகள் -ஊக்கமளிக்கும் 15 டுவிட்டர் பொன்மொழிகள் -


முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் மறைவு நமது நாட்டுக்கு ஈடுசெய்யமுடியாத பேரழிப்பாகும். அவர் நம்மிடையே இல்லை என்றாலும் அவரது வார்த்தைகள் நம்மை வழி நடத்தி செல்லும். டாக்டர் அப்துல் கலாம் தனது வாழ்நாளில் பல உயரிய விஷயங்களை கூறியிருக்கிறார். அவரது டுவிட்டர் கணக்கில் அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களே அதற்கு சாட்சியாக உள்ளன. அவரது டுவிட்டர் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ள 15 அற்புதமான கருத்துக்கள் பின்வருமாறு:

Saturday, 25 July 2015

கடவுளின் மௌன மொழி (மீள் பதிவு)


ஆசைக்கொன்று ஆஸ்திக்கொன்று என்பார்
ஆறாண்டில் ஆறினைப் பெற்றெடுத்து
கடவுள் தந்த வரமென்பார்

மரத்தடியில் அமர்ந்திருக்கும் என்னிடம்
மாடமாளிகை மாடிக்கட்டடம் வேண்டுமென்று
வேண்டுதலை முன் வைப்பார்

Sunday, 19 July 2015

வியாபம் ஊழல்- தொடரும் மர்ம மரணத்திற்கான காரணம்

‘வியாபம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது. ஆனால் ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்கள்.

Sunday, 12 July 2015

பிளாஸ்டிக் அரிசி வாங்கலையோ... பிளாஸ்டிக் அரிசி...

அரிசிகளில் கலக்கப்படும் சீன பிளாஸ்டிக் அரிசியானது சீனிக்கிழங்கு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சின்த்தெடிக் பிளாஸ்டிக் பிசின் சேர்த்து உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாக உணவுப் பொருட்களில் கலப்படம் என்ற பிரச்சினை பூதாகரமாக உருவாகியுள்ளது.

Friday, 10 July 2015

பாகுபலி- விமர்சனம்

நான் ஈ’ படத்திற்கு எஸ்.எஸ். ராஜமௌலி குழுவின் கடின உழைப்பால் கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட படம் ‘பாகுபலி’ இத்திரைப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரூ. 250 கோடி செலவில் பிரம்மாண்டமாக இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 4,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.

Saturday, 4 July 2015

காதலின் மகத்துவத்தையும், வாழ்க்கையின் அர்த்ததையும் புரிய வைத்த ஒரு மரணம் - ஓர் உண்மை நிகழ்வு

காதல்... இந்த வார்த்தைக்குதான் எவ்வளவு சக்தி? இறப்பில் கூட சேர்ந்து வாழும் பாக்கியத்தை குழந்தைப் பருவம் முதல் காதல் செய்து வாழ்ந்து வந்த தம்பதிக்கு அளித்துள்ளது இந்த மகத்தான மனித உணர்வு.

Saturday, 27 June 2015

தலைக்கவசம் அணியும் விவகாரத்தில் அரசின் அக்கறை கண்டு வியக்கிறோம்


ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, சென்னை ஐகோர்ட்டு, ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து ஜூலை 1–ந்தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் ஆயத்தமாகி வருகின்றனர். இது பற்றி வாட்சப்பில் வலம் வருகிற கீழ்காணும் வாசகம் என்னை சிரிக்க வைத்தது.

Friday, 26 June 2015

லலித் மோடி விவகாரம் - நாங்க நம்பிட்டோம்


சுஷ்மா ஸ்வராஜ்-வசுந்தரா ராஜே-லலித் மோடி விவகாரம் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் லலித் மோடி, லண்டனில் பிரியங்கா காந்தியையும், ராபர்ட் வதேராவையும் தனித்தனியாக சந்தித்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Wednesday, 24 June 2015

பேயினாலும் பயம் - பி இ னாலும் பயம் (சம்பவங்களும் சங்கடங்களும்)


ஸ்டெபி கிராபை நினைவிருக்கிறதா..
ஒரு காலத்தில் டென்னிஸ் உலகில் நம்பர் ஒன் வீராங்கனையாக வலம் வந்தவர். என்பது தொன்னூறுகளில் டென்னிஸ் உலகில் பரபரப்பாகிய விளையாடிய ஸ்டெபி 107 பதக்கங்களை வென்றவர். அதில் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் அடக்கம். இப்ப அவங்க கேரளாவையும் கலக்க இருக்காங்க. எதாவது கேரளாவுல டென்னிஸ் போட்டி நடத்த போறாங்களுனு தானே கேக்க வரீங்க அது இல்லங்கோ விசயம் கேரள அரசு ஸ்டெபி கிராபியை கேரள ஆயுர்வேத மருத்துவத்தின் விளம்பரத் தூதுவராக நியமித்து இருக்கிறார்கள் என்பது தான் செய்திங்கோ ( இனிமே ஸ்டெபி டிவியில அடிக்கடி பார்க்கலாம்)...

Sunday, 21 June 2015

கட்செவி (வாட்ஸ்அப்) கலாட்டா

நாங்கள் திமுகவிலிருந்து வெளியேற்றப்படவும் இல்லை; வெளியேறவும் இல்லை. -திருமா..
# ஈயம் பூசுனமாதிரியும் இருக்கணும்! பூசாத மாதிரியும் இருக்கணும்!


Wednesday, 17 June 2015

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் - திருவிழா


மணப்பாறை இந்நகரம் புகழ்மிகு வணிக நிலையங்களுக்கும், முறுக்கு எனும் சுவையான தின்பண்டத்திற்கும், கிழக்கே எழுகின்ற ஞாயிறு மேற்கே விழுகின்ற வரையிலும் உழுகின்ற, உழைக்கின்ற உழவர் பெருமக்களின் உயிர்நாடியாகத் திகழும் மாடுகளுக்கு மிகவும் பெயர் பெற்றதோடன்றி புனிதமிகு தெய்வத்தலங்கள் பலவற்றிற்கும் பெயர் பெற்றது எனச் சொன்னால் அது மிகையாகாது.

Saturday, 13 June 2015

ரோமியோ ஜுலியட் – விமர்சனம்


‘ரோமியோ – ஜுலியட்’ என அருமையான காதல் ஜோடியின் பெயரை படத்தின் தலைப்பாக வைத்து விட்டு, காதலர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்வதை முழு படமாக எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் லட்சுமண்.

Monday, 8 June 2015

குப்பை வண்டி விதி- கடைபிடிப்போம்

குப்பை வண்டி விதி’ தெரியுமா?ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.

Saturday, 6 June 2015

காலமறிதல்-குறளின் வழி ஒரு கட்டுரை


ஆடிப்பட்டம் தேடிவிதை’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. காலம் அறிந்து பயிர்செய்யும் போது, அப்பயிரை வளர்க்க இயற்கையே உதவி செய்துவிடும்.

Tuesday, 19 May 2015

பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் வடநாட்டு தொலைக்காட்சித் தொடர்


விடுமுறையில் எனது மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு சரியாக இரவு 7.30 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சி வைத்தார்கள். தொடர்ச்சியாக நான்கு வடநாட்டு தொலைக்காட்சித் தொடர் ஒளிப்பரப்பானது. முதல் இரண்டு நாள் விளம்பரங்களுக்கு இடையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நானும் அமர்ந்து விளம்பர இடைவெளியில் பார்த்து வந்தேன்.

Monday, 18 May 2015

மதத்தை விட மனிதாபிமானமே மேலானது- நிருபித்த உண்மை நிகழ்வு

நியூசிலாந்தில் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஒரு குழந்தையின் தலையிலிருந்து வழிந்தோடிய ரத்தத்தை தடுத்து நிறுத்த தனது டர்பன் எனப்படும் தலைப்பாகையை கழற்றிய அதை குழந்தையின் தலைக்குக் கீழே வைத்து உதவிய சீக்கியரின் செயலால் அனைவரும் நெகிழ்ந்து போனார்கள்.

Tuesday, 14 April 2015

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த தின சிறப்பு பகிர்வு....


விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர்.
தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன்.

Friday, 10 April 2015

புதிய விடியல்


கருங்கூந்தல் விரித்து உலகை மறைத்த
இரவுப்பெண் அள்ளி முடிந்து கொண்டாள்
சமுத்திரத்தில் குளித்து மஞ்சலாடை  உடுத்தி 
மாப்பிள்ளை போல் மெல்லிய புன்னகையோடு
புறப்பட்டு விட்டான் கதிரவன்..

Wednesday, 8 April 2015

இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டவர்கள். அதிகாரம் செய்ய அல்ல!

மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த பிரதிநிதி ஆளுகிறார் எனும் சொல் கொஞ்சமும் பொருத்தமானதாக தோன்றவில்லை எனக்கு. மக்களிடம் வாக்கு கேட்கும் போது எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று காலில் விழாத குறையாக கெஞ்சியும் (சில நேரங்களில் காலிலும் விழுகிறார்கள்).

Tuesday, 7 April 2015

எங்கள் முதன்மைக்கல்வி அலுவலர் செய்த மற்றுமொரு சிறப்பு


வணக்கம் நண்பர்களே!
பெரியவர் முதல் சிறியவர் வரை யார் தன்னை நாடி வந்தாலும் அவர்களின் வேண்டுகோளுக்கு செவி கொடுத்து இன்முகத்தோடு வழி அனுப்பும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா.அருள்முருகன் அவர்களைப் பற்றி நான் கூறிவதை விட விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் சுட்டி விகடன் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போமா!

Monday, 6 April 2015

ஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை


அப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே தனியாக ஊருக்கு சென்று வந்து விடுவேன். தேர்வு சமயத்தில் என் தாத்தா இறந்து விட்டார் என்று செய்தி வந்தது. அம்மாவும் அப்பாவும் உடனே ஊருக்கு கிளம்பி விட்டார்கள். நானும் என் தம்பியும் தேர்வு எழுத வேண்டுமென்பதால் மதியத்திற்கு மேல் ஆள் விட்டு அழைத்து கொள்வதாக முடிவு. ஆனால் நாங்கள் முன்னரே தேர்வு எழுதி முடித்து விட்டு ஊருக்கு தனியாக கிளம்பி சென்று விட்டோம்.

Tuesday, 31 March 2015

ஈபிள் டவர் பற்றி நமக்கு தெரியாத வியக்க வைக்கும் சில தகவல்கள்!!!


ஈபிள் டவரை இடிக்க திட்டம்
கடந்த 1909 ஈபிள் டவரை இடிக்க திட்டமிடப்பட்டது, பின் இது சிறந்த ரேடியோ ஆண்டெனாவாக (Radio Antena) உபயோகப்படுகிறது என அந்த திட்டத்தை கைவிட்டுனர்.

Monday, 30 March 2015

இந்திய விளையாட்டு ரசிகர்கள் மாற வேண்டும்


இந்திய அணி உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை என்ற கவலை எனக்கும் ஏற்பட்டது தான். இருந்தாலும் விளையாட்டில் வெற்றி என்பதும் தோல்வி என்பதும் இரு துருவங்கள். வெற்றி பெறும் போது தலையில் தூக்கி கொண்டாடிய ரசிகர்கள் தோல்வி அடைந்தவுடன் அவர்களின் கொடும்பாவிகளை எரிப்பது, வீடுகளைத் தாக்குவது என்று வன்முறையில் இறங்குவது எவ்வளவு கேலிக்கூத்தான செயலாக இருக்கிறது. தோல்வி அடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ரசிகனின் கடமை அல்லவா! உண்மையில் இந்திய அணி இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் யாரும் எதிர்பார்க்காத எழுச்சியைப் பெற்றது (இறுதிப் போட்டியைத் தவிர)

Sunday, 29 March 2015

வியக்க வைக்கும் சோழர்களின் தேர்தலும், ஆட்சி முறையும்!

“உத்திரமேரூர்” இது பிற்காலச் சோழர் காலத்தில் ஒரு சிறிய ஊராக விளங்கியது. இவ்வூரில் உள்ள வைகுந்தப் பெருமாள் கோவிலின் கற்சுவரில் ஒரு பெரிய கல்வெட்டுக் காணப்படுகின்றது. இது உத்திரமேரூர்க் கல்வெட்டு எனப்படுகிறது.

Wednesday, 25 March 2015

உங்கள் நடவடிக்கை இங்கு கண்காணிக்கப்படுகிறது!


நம்மை யாரும் கவனிக்கவில்லை என்றால் நமது நடவடிக்கை இயல்பாக இருக்கும். உதாரணமாக தெருவில் நடந்து வரும் போது இயல்பாக கையை வீசிக் கொண்டு நடந்து வருவோம். அதுவே யாராவது நம்மைக் கவனிக்கிறார்கள் என்று நமக்கு தெரிந்து விட்டால் அடக்கமாக அமைதியான முகத்தோடு அவர்களைக் கடந்து விடுவோம். இது இயல்பு தான். இதில் ஒன்றும் தவறில்லை.

Tuesday, 24 March 2015

நீங்கள் எப்படிப் பட்டவர்கள் - ஒரு பொழுதுபோக்கு


A என்பது குறிப்பிடத்தக்க எழுத்தாகும். உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.

Monday, 9 March 2015

நான் ஒரு பெண்! - சிந்திக்க சில நிமிடங்கள்... பிரியா தம்பியின் விகடன் கட்டுரை

நான்... நான் ஒரு பெண்; நான் ஒரு மகள்; நான் ஒரு தாய்; நான் ஒரு தங்கை; நான் ஒரு மனைவி; நண்பர்களுக்கு நான் ஒரு தோழி; வேலை செய்யும் இடத்தில் நான் மேலதிகாரி. 30 ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல் இன்று என் வாழ்க்கை இல்லை. பொருளாதாரத்தில் நான் தனித்து நிற்கிறேன். விரும்பிய உடைகளை அணிகிறேன். ஆனால், எங்கேனும் ஒப்பனைகள் இன்றி நான், நானாக இருக்க முடிகிறதா?

Sunday, 8 March 2015

நெகிழ வைக்கும் கதை - நிஜத்திலும் நிகழ்கிறது

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.

Saturday, 7 March 2015

முகேஷ் சிங் மட்டுமா குற்றவாளி...?


நிர்பயா வழக்கில், ‘பாலியல் பலாத்காரத்துக்குப் பெண்கள்தான் பொறுப்பு. பெண்கள் கண்ணியமான ஆடை அணிய வேண்டும். இரவு ஒன்பது மணிக்கு மேல் வெளியில் செல்லும் பெண் ஒழுக்கமானவள் அல்ல' என குற்றவாளி முகேஷ் சிங் தெரிவித்துள்ள கருத்துகள் கடும் கண்டனங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு தனது நண்பருடன் சினிமாவுக்கு சென்றுவிட்டு, இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டார். 13 நாட்கள் சிகிச்சைக்குப் பின் பரிதாபமாக உயிரிழந்தார் நிர்பயா.

Sunday, 22 February 2015

ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்..

லிங்கன் தன் மகனை பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்..
                  அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்கு சொல்லித்தாருங்கள். ஆனால் பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு
தெரிவியுங்கள் .

Wednesday, 11 February 2015

க00 - 100 - C - நூறின் வரலாறு

100 என்பது மூன்றிலக்க எண்களின் முதல் எண். எந்த எண்ணுக்கும் இல்லாத சிறப்பு இந்த நூறு எனும் எண்ணிற்கு உண்டு. எப்பவும் ஆண்டின் முதல் நாளுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் போல மூன்றிலக்க எண்ணின் முதல் எழுத்தான நூறுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். பல துறைகளிலும் நூறு என்பதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம். அவை ஒவ்வொன்றாக காண்போம் எனது சிற்றறிவுக்கு எட்டிய வரை வரிசை படுத்துகிறேன் கூடுதல் தகவல்களை நண்பர்கள் பின்னூட்டத்தில் கூறலாம்.

Thursday, 5 February 2015

என்னை அறிந்தால்- விமர்சனம்


கடந்த 1 வருடத்திற்கு மேலாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக வந்துள்ளது என்னை அறிந்தால். சில நாட்களாகவே காதல், சைக்கோ கதைகளால் துவண்டு போயிருந்த கௌதம் மேனன் தனது ஹிட் பார்முலாவான காக்கிசட்டையை மீண்டும் எடுத்து உடுத்தியள்ளார். இந்த முறை கொஞ்சம் எதிர்ப்பார்ப்புடன் அஜித் போன்ற மாஸ் ஹீரோவை அணிய வைத்துள்ளார். மேலும் வழக்கமான காதல், ஆக்ஷன் என இந்த படத்தில் இறங்கி அடித்துள்ளார் கௌதம் என்ளே சொல்லலாம்.

Wednesday, 4 February 2015

ஒரு கோழிச்சண்டையால் வந்த வம்பு

கருத்து சொல்றதுக்கு முன்னாடி ஒரு குட்டிக் கதையைச் சொல்லலாம்னு இருக்கேன். காதுல ரத்தம் வந்தாலும் ஒய் பிளட்னு சக நண்பரிடம் கேட்டுக்கங்க ஏன் கிட்ட சண்டை வம்பு.

Thursday, 29 January 2015

மாணவர்களின் கைகளில் தவழும் இணைய தளங்களும் ஆபாச படங்களும்


வளர்ந்து வரும் நவீன உலகத்தில் வளர்ந்து வரும் இன்றைய குழந்தைகள் பெற்றோர்களை விட நுண்ணறிவிலும் அதி நவீன பொருட்களைக் கையாளுவதிலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். பெரியவர்களுக்கே கையாளத் தெரியாத அலைபேசிகள் குழந்தைகள் கைகளில் என்ன பாடு படுகிறது தெரியுமா! அதை அப்படியே பிரித்து மேய்ந்து விடுகிறார்கள் இன்றைய சுட்டிக் குழந்தைகள். இவர்களின் வயதில் நாம் இருக்கும் போதெல்லாம் நல்லது எது கெட்டது என்பதைக் கூட நம் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தால் தான் புரியும்.

Monday, 26 January 2015

உலக வரலாற்றில் ஒரு மொழிப் போர்- தி இந்து-கட்டுரை

சென்னை நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம் பாக்கம் சிவலிங்கம், விருகம் பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி...

Sunday, 25 January 2015

உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா?

NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.

Friday, 23 January 2015

மாதொருபாகனும் மகாபாரதமும் ( திரு. சுப.வீரபாண்டியன் அவர்களின் பதிவு)

படைப்புச் சுதந்திரம் எதுவரை நீளலாம் என்னும் வினாவிற்கு உடனடி விடை ஏதுமில்லை என்றாலும், அடுத்தவர் சுதந்திரத்தைப் பாதிக்காத வரை அல்லது பொது ஒழுங்கைக் கெடுக்காத வரை என்ற விடையே பெரிதும் கூறப்படுகின்ற ஒன்றாகும்! எனினும்,அடுத்தவர் சுதந்திரம் என்பது எதுவரை அல்லது பொது ஒழுங்கு என்றால் என்ன, அதனை யார் தீர்மானிப்பது என்னும் வினாக்கள் எழும்போது, மீண்டும் முதல் வினா விடையற்றே நிற்கிறது. எவ்வாறாயினும், படைப்புச் சுதந்திரத்திற்கு எந்த எல்லையும் கிடையாது என்னும் கூற்றில் நம்மால் உடன்பட முடியவில்லை. அது பற்றிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றே தோன்றுகிறது.

Tuesday, 20 January 2015

38 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி- படப்பதிவு

கல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை


அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம்.
நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலக அளவில் 'கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும் அதே பின்லாந்துதான்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட
நிலையில் இருந்தாலும் அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில்
பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.

Sunday, 18 January 2015

அரசின் உதவியோடு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் கொள்ளைகள்

அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..? முடியும்..!!

Sunday, 11 January 2015

பத்திரிகையாளன் பாரதி - தினமணி கட்டுரை

வலை உறவுகளுக்கு வணக்கம்
இணையத்தில் உலாவிய பொழுது 2012 செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் செங்கோட்டை ஸ்ரீராம் அவர்கள் எழுதிய தினமணி கட்டுரை ஒன்று படித்தேன். அது மிகவும் என்னை மிகவும் கவர்ந்தது. உங்களுக்கும் பிடிக்குமென்பதால் அப்படியே வரி மாறாது பதிவிடுகிறேன்.

Saturday, 10 January 2015

மறை நீர் பொருளாதாரம் - ஓர் அலசல்

மறை நீர் (Virtual water) என்பது ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் ஆகும். அந்த பொருளை உருவாக்குவதற்கு தேவைப்படும் நீர் தான் மறை நீர். மறை நீர் வணிகம் என்பது ஒரு பொருளாதார தத்துவம் ஆகும்.