Wednesday, 19 March 2014
Monday, 10 March 2014
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்- அறிவோம்
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் என்பது (International Day for the Elimination of Violence against Women) ஒரு துன்பியல் நிகழ்வை ஞாபகப்படுத்தும் விதத்தில், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் , 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அது வருடந்தோறும் நவம்பர் 25ஆம் நாளை பெண்களிக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும் என்பதே அந்த தீர்மானம். பின்னர் அவ்வாண்டு டிசம்பர் 17 ஆம் ஐ.நா.பொதுக்குழு மேற்கண்ட நாளை பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாளாக அறிவித்தது.
Saturday, 8 March 2014
மாணவர்களுக்கு எமனாகும் இருசக்கர வாகனங்கள்
இப்போதெல்லாம் அலாரம் எழுப்பி காலை துயில் எழுவது இல்லை. ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டு எழுந்திருக்கிறேன். நித்தம் என்னை எழுப்பதைக் கடமையாக கொண்டுள்ளன அவைகள். காரணம் நமது இல்லம் அரசு தலைமை மருத்துவமனை எதிர்புறம். சப்தம் கேட்டு என்னவென்று விடயத்தைத் தெரிந்து கொண்டவர்களிடம் கேட்டால் விபத்து நேரிட்டு கல்லூரி மாணவன் இறந்து விட்டான் என்பது தான் பெரும்பான்மையான மறுமொழியாக இருக்கும். அந்த அளவிற்கு மாணவர்கள் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். இளம் ரத்தம் என்பதால் வண்டியை முறுக்கி வேகத்தைக்கூட்டி பயணத்தைத் தொடர்ந்து எதிர்வரும் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி இறக்க நேரிட்டு பெற்றோரையும் தன்னைச் சார்ந்தவர்களையும் வேதனைகளில் ஆழ்த்தி விட்டீர்கள் சென்று விடுவது தொடர்கதையாகுகிறது.
Tuesday, 4 March 2014
விமலனின் பூப்பதெல்லாம்!- ஒரு பார்வை
சிறுகதை மனித உள்ளத்தின் அடைய முடியாத ஆசைகளின் எதிரொலி என்றார் புதுமை பித்தன். சுற்றி நிகழும் கொடுமை, சூழலில் நிகழும் அவலம் இவற்றைக் கண்டும் காணாமல் பார்த்தும் பார்க்காமல் பாதையோரத்தில் செல்கின்ற நடைபாதை வாசியல்ல எழுத்தாளன். அவனுக்குச் சமூக அக்கறை இருக்க வேண்டும். சுற்றி நிகழும் அழுகையின் குரல் புரிய வேண்டும். அகிலத்தின் அவலத்தில் அவன் மூழ்கி எழவேண்டும். அப்பொழுது தான் அவனது கதை மாந்தர்களும் சமூகத்திடையே மின்னிச்சிறப்பார்கள். எனவே எந்த எழுத்தாளனுக்குச் சமுதாயத்தின் மீது அக்கறை இருக்கிறதோ அந்த எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகள் எதிர்காலத்தில் பேசப்படும் படைப்புகளாக மிளிரும்.
Wednesday, 26 February 2014
Monday, 24 February 2014
Wednesday, 19 February 2014
வெளுத்தது காங்கிரஸின் முகம்
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. பின்னர் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, கடந்த 2000ம் ஆண்டில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்தனர்.
Subscribe to:
Posts (Atom)




