அரும்புகள் மலரட்டும்: காதல் அலங்காரம்!

Sunday 13 March 2016

காதல் அலங்காரம்!

உனது நடுநிசி உளரல்கள்
எனது பெயரை உச்சரிக்கும் போதும்!
உன் தனிமை என் நினைவுகளால் தகிக்கின்ற போதும்!

என் அருகாமையை உன் உருவம் ஆக்கிரமித்துக் கொள்ளும் போதும்!
தொலைவில் நானிருந்தும் என் தலையனை உன் படுக்கையை
நிரப்பிக் கொள்ளும் போதும்!

இல்லம் வந்து சேரும்வரை உன் இதயத்துடிப்பு
இருமடங்காய் அதிகரிக்கும் போதும்!
உண்ணும் வேளையிலும் என் நினைவுகளை விழுங்கிக் கொள்ளும் போதும்!

என் சுவாசத்தில் உன் வாசத்தை உணர்கின்ற போதும்!
உன் மனக்குறிப்புகளை என் கரங்கள்
செய்து முடிக்கின்ற போதும்!

உன் சோகம் என் தோள்களைத் தேடுகின்ற போதும்!
நம் காதல் தன் ஆயுளை நீட்டித்து
அலங்கரித்துக் கொள்கிறது!!

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

9 comments:

  1. Replies
    1. நன்றிங்க சகோதரி வருகை தந்து கருத்திட்டமைக்கு.

      Delete
  2. Replies
    1. நன்றிங்க சகோதரர் வருகை தந்து கருத்திட்டமைக்கு.

      Delete
  3. காதல் கவிதையில் பின்னுறீங்க ஐய!

    ReplyDelete
  4. அய்யா, உண்மையான காதல்,ஆயுளை நீட்டித்து வாழ்க்கையையே அலங்கரிக்கச் செய்யும்!

    ReplyDelete
  5. ஐயா,என்'எண்ணப்பறவை'யில் 'கதை சொல்லப் போறேன்'..படிங்க.

    ReplyDelete
  6. ஆகா பாண்டி
    ...
    தொடர்க

    ReplyDelete