அரும்புகள் மலரட்டும்: December 2015

Friday 11 December 2015

போராடிய திருச்சி சிவா அவர்களுக்கு பாராட்டுகள்

வரலாறு காணாத மழையால் பாதித்துள்ள தமிழகத்தை கருத்தில் கொண்டு, அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வைக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை பிரதமரிடம் வைக்க கடுமையாக போராடியுள்ளார் திருச்சி சிவா.

Friday 4 December 2015

இயல்பு நிலை திரும்பட்டும்.

வணக்கம் நண்பர்களே!
வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா 2015 முடிந்தவுடன் சகோதரர் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்து மழையில் மாட்டிக் கொண்டு அவரை மட்டும் பேருந்தில் அனுப்பி விட்டு நான் சுமார் 1.30 மணி நேரம் காத்திருந்தும் மழை நிற்காததால் நனைந்து கொண்டே வீடு சென்ற தருணமே எனக்கும் வலைப்பதிவர்களுக்குமான கடைசி சந்திப்பாக வெகு நாட்களாக இருந்து வந்தது.