அரும்புகள் மலரட்டும்: ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்..

Sunday 22 February 2015

ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்..

லிங்கன் தன் மகனை பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்..
                  அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்கு சொல்லித்தாருங்கள். ஆனால் பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு
தெரிவியுங்கள் .

பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது , கோழைத்தனம் என புரியவையுங்கள். புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடிலா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும்,சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும் ,பசுமையான மலை யடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள் அவனுக்கு ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள்

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். என அறிவுறுத்துங்கள் .எனினும் உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள் .. துயரமான வேளைகளில்
சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள் ;. போலியான நடிப்பை கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள். அவனை கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்

சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...

இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரஹாம் லிங்கன்.
கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

7 comments:

  1. இக்கடிதம் பற்றி முன்னர் நான் படித்துள்ளேன். இருப்பினும் தங்களுடைய எழுத்து மூலமாகப் படிக்கும்போது மேலும் சிறப்பாக இருந்தது. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. சூடான பதிவை, சுவை குறையாமல். சூடு ஆறுமுன் பகிர்ந்தமைக்கு பிடியுங்கள் தம + 3.

      Delete
  2. படிக்கப் படிக்க மனம் நெகிழ்கிறது நண்பரே
    இவரைப் போல ஒவ்வொரு பெற்றோரும் இருந்து விட்டால்
    நினைக்கவே ஆனந்தமாக இருக்கிறது
    நன்றி நண்பரே

    ReplyDelete
  3. கற்றல் என்ற சொல்லின் உண்மையான பொருள் இன்று கடலில் விழுந்த பெருங்காயம் போல் ஆகி விட்டது. அடுக்கடுக்காக பாடப்புத்தகங்கள் குழந்தைகளின் முதுகை மட்டுமல்ல மூளையையும் வளைத்து விடுகின்றன. Rat race எனப்படும் வெற்று போட்டியில் அதிக மதிப்பெண்ணுக்கே மரியாதை. புதுப்புது விஷயங்களைக் கற்றுகொள்ளவோ கற்றுக்கொடுக்கவோ இடமே இல்லாத கல்வி முறை.

    லிங்கன் இன்று இருந்திருந்தால், இந்த கடிதத்தை யாருக்கு அனுப்புவது என நிச்சயம் குழம்புவார். பெறுனர் முகவரி இல்லாத அந்த கடிதம் திரும்பி அவரிடமே வந்து சேரும்...

    ReplyDelete
  4. Hello, this weekend iѕ pleasant іn favor of me, ass tɦіѕ momdnt i aam reading this wonderful educational post
    ɦere at mү house.

    My web blog :: tert htyt

    ReplyDelete
  5. நல்ல கடிதம்... முன்பே வாசித்திருந்தாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கலாம்.

    ReplyDelete