அரும்புகள் மலரட்டும்: November 2014

Monday 17 November 2014

கனவில் வந்த காந்தி (தொடரும் கனவு)

நண்பர்களுக்கு வணக்கம்.
ஒரு வழியாக இணையத்திற்குள்ளே மீண்டும் வந்து விட்டேன். தேவக்கோட்டை மண்ணின் மைந்தர் சகோதரர் திரு.கில்லர்ஜி கொழுத்திப் போட்ட மத்தாப்பு இணையப் பக்கமெல்லாம் ஒளி விடுவது கண்டு மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த ஆட்டத்திற்கு கவிஞர் திரு.நா.முத்துநிலவன் ஐயா அவர்களும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆய்வாளர் திரு.ஜம்புலிங்கம் ஐயா அவர்களும் இழுத்து விட்டிருக்கிறார்கள். எண்ணங்களை விசாலப்படுத்திக் கொள்ள உதவும் இது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வாய்ப்பளித்த நண்பர்கள் இருவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு நானும் களம் இறங்குகிறேன்.

மீள் வருகை


மழை வரும் மாலைப்பொழுதைமுந்தி சொன்னது மேகக்கூட்டம்
மழையும் வந்தது இடியோடு

வராத விருந்தினர் வந்ததைப்போல்
வணக்கம் சொல்லி வரவேற்றோம்
வாசல் வந்த மர்ந்து