அரும்புகள் மலரட்டும்: தன்னம்பிக்கையை விதைக்கும் நிகழ்வு

Monday 5 May 2014

தன்னம்பிக்கையை விதைக்கும் நிகழ்வு


நிகழ்வு:

அமெரிக்க கால்பந்து வரலாற்றில் பிரவுன் என்பவர் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார். அவர் ஒரு நாள் களத்திலிருந்து தனது வெற்றிக்கோப்பைகளுடன் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரது முழங்கால் அளவிற்கே இருந்த சிறுவன் அவர் கால்களைச் சுரண்டினான்.
உடனே பிரவுன் அவ்ர்கள் திரும்பிப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் தம்பி என்று கேட்டார் அச்சிறுவன் பிரவுனைப் பார்த்து நான் உங்கள் ரசிகன் என்றான். இன்னும் கொஞ்ச தூரம் சென்ற பிறகு மீண்டும் காலை சுரண்டினான் அச்சிறுவன். அதற்கு அச்சிறுவனிடம் பிரவுன் உனக்கு என்ன வேண்டும் தம்பி என்று கேட்கிறார் அதற்கு அச்சிறுவன் நீங்கள் இதுவரை எத்தனை போட்டிகளில் விளையாடினீர்கள், எங்கெங்கு விளையாடினீர்கள், எத்தனை கோப்பைகள் வாங்கினீர்கள் என்பது எல்லாமே எனக்கு  அத்துப்படி என்றான். அதற்கு பிரவுன் வெரிகுட் என்று சொல்லிவிட்டு தனது கார் நோக்கி நடந்தார். காரில் ஏறும் தருவாயில் கார் கதவைத் திறக்க முற்படுகிறார் அவரது கால் சிறுவனால் மீண்டும் சுரண்டப்பட்டது. இம்முறை பிரவுன் சிறுவனைப் பார்த்து சற்று கோபமாக உனக்கு என்ன வேண்டும் தம்பி என்று உரக்க கேட்கிறார் அதற்கு அச்சிறுவன் பிரவுனைப்பார்த்து இவைகள் அத்தனையும் ஒருநாள் நான் முறியடிப்பேன் என்றான். அவன் யார் தெரியுமா?

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். சிறுவயதில் காசு கொடுத்து கால்பந்து பார்க்க வசதியில்லாதவன். அவன் தான் பின்னர் அமெரிக்க கால்பந்தாட்டத்தில் தனி முத்திரை பதித்தவன். அவர் கால்பந்தாட்டத்தில் ஒரு புயல் சுழன்று அடிப்பது போல் அவர் களத்தில் இறங்கினால் எதிரணி பஞ்சாய் பறந்து விடும். கால்பந்தாட்டத்தில் அவர் சாதிக்காத சாதனைகளே இல்லை எனலாம். கோடி கோடியாய் பணம் புகழ் என்று சம்பாதித்தவர் ராக்கெட்டின் மூக்கின் மேல் உட்கார்ர்ந்து கொண்டு புகழின் உச்சிக்கே போனவர் அவர் தான் ஓ.ஜே. சிம்ஸன்.

நிகழ்வோடு ஒரு சிந்தனை:

ஓ.ஜே. சாம்ஸனின் இளமைக்கால தன்னம்பிக்கை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கும் என்றே நம்புகிறேன்.இந்தியா இளமையான நாடு ஆம் தன் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் இளைஞர்களைக் கொண்ட நாடு ஆனால் இளைஞர்களின் பங்களிப்பும் ஆக்கங்களும் கண்டுபிடிப்புகளும் நாட்டின் வளர்ச்சிக்கு போதுமானதாக இல்லை. விளையாட்டுத் துறையிலும் இவர்களின் வளர்ச்சியை இன்னமும் எட்டவில்லை அப்படியே எட்டிப்பார்த்தாலும் அதற்கு ஆளும் அரசாங்கங்கள் முனைப்பு காட்டுவதில்லை என்பதே முதற்காரணம். 

ஓ.ஜே. சிம்ஸன் போன்ற இளைஞர்கள் போலும் எண்ணற்ற இளைஞர்கள் நிரம்பிக் கிடக்கும் நாடு இது. அவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் அணியும் காலணியால் துச்சமென மிதிபடுகிறார்கள் என்பது வேதனையான உண்மை. இது மாற வேண்டும். இளைஞர்கள் இன்னும் இன்னும் விளையாட்டிலும் புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்ட முனைந்திட வேண்டும் நல்லோர்கள் கைகொடுப்பார்கள் எனும் நம்பிக்கையோடு. வெளிநாட்டினர் தயாரிக்கும் பொருட்களைத் தான் இறக்குமதி செய்து வெட்கமின்றி வாங்கிப் பயன்படுத்துகிறோம் என்பதை ஒவ்வொரு இளைஞர்களும் சிந்தித்தால் இந்தியா உலக நாடுகளுக்கே சவால் விடும் காலம் வெகு அருகில். நன்றி.

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

17 comments:

  1. ஓ.ஜே. சாம்ஸன் அவர்களின் மனஉறுதி முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் ஒரு பாடம்...

    ReplyDelete
  2. தன்னம்பிக்கை விதை/

    ReplyDelete
  3. ஓ.ஜே. சாம்ஸன் அவர்களைப் பற்றிய தகவல்களுடன் இனிய பதிவு!.. வாழ்க நலம்..

    ReplyDelete
  4. அருமையான பதிவு
    நிச்சயம் படிப்பவர் அனைவருக்குள்ளும்
    நம்பிக்கை விதையை இப்பதிவு ஆழ
    ஊன்றிச் செல்லும்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தன்னம்பிக்கை பேசும் பதிவு! சிறப்பான ஒன்று! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அருமையான பதிவு
    நமது நாட்டில்தான் விளையாட்டில் கூட அரசியல்

    ReplyDelete
  7. தேவையான பதிவு.
    நம்பிக்கை விதையை நன்றாக விதைத்தீர்கள்.
    நன்று.

    ReplyDelete
  8. தன்னம்பிக்கை தரும் சிறப்பான பதிவு பாண்டியரே! ஜூலை ல் திருமணமாமே வாழ்த்துக்கள் பாண்டியா மிக்க மகிழ்ச்சி !எல்லா நலன்களும் பெற்று இன்பமாய் வாழ்க....!

    ReplyDelete
  9. எறும்புகள் சேர்ந்து ஒரு மரத்துண்டையே தூக்கிச் செல்லும் அழகிய படம் அருமை பாண்டியன்! தன்னம்பிக்கை பற்றிய பதிவிற்கு இதைவிடவும் சிறந்த படம் கிடைக்காது. கட்டுரையும் சிறப்பு, படம் வெகுசிறப்பு. நன்றி

    ReplyDelete
  10. உங்களின் சிந்தனை ஆள்வோருக்கு வந்தால் உங்களின் கனவு நனவாகும் !
    த ம 4

    ReplyDelete
  11. சிறப்பான பதிவு.மாணவர்கள் அறிய வேண்டிய தகவல்.
    நம் நாட்டில் கிரிக்கெட்டைத் தவிர வேறு விளையாட்டுக்களில் ஆர்வம் ஏற்படுத்தவேண்டும்.சச்சின் ஒரு கால்பந்து அணியை வாங்க இருப்பதாக படித்தேன். அப்படியாவது கால்பந்தில் மக்களுக்கு ஆர்வம் உண்டாகிறதா என்று பார்ப்போம்

    ReplyDelete
  12. ஓ.ஜே. சாம்ஸனின் இளமைக்கால தன்னம்பிக்கை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கும்..

    நம்பிக்கை விதைகளை விதைக்கும் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  13. ///அவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் அணியும் காலணியால் துச்சமென மிதிபடுகிறார்கள் என்பது வேதனையான உண்மை///

    அரசியல்வாதிகளின் தலையீடு இன்றி எதுவுமே இன்று நடப்பதில்லை என்பது கண்கூடு. ஜனநாயகம் என்ற போர்வையில் இன்னும் மன்னராட்சியே நடைப்பெற்றுக்கொண்டிருப்பது மறைமுக உண்மை. ஒருவன் உரக்க கூவினால் அவனுடைய கழுத்து நெறிக்கப்படுகிறது.

    எனது வலைத்தளத்தில் பயனுள்ள பதிவொன்று: கம்ப்யூட்டர்களை ஸ்பைவேர்களிலிருந்து பாதுகாக்கும் நார்ட்டன் ஸ்பைவேர் ரிமூவல் டூல்

    ReplyDelete
  14. நல்ல பதிவு பாண்டியன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. அன்பின் பாண்டியன் - அருமையான பதிவு - தன்னம்பிக்கையினைப் பற்றிப் பேசும் பதிவு - படமோ பதிவினை உயர்த்தும் படம் - எறும்புகளும் மரத்துண்டும் - நன்று நன்று.

    சிம்ஸனின் இளமைக்கால சிந்தனை - நிகழ்வு அத்தனையும் - அவரை வாழ்க்கையில் எவ்வாறு உயர்த்தி இருக்கின்றன என்பது ஒவ்வொரு இளைஞனும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. தகவல் பகிர்வினிற்கு நன்றி பாண்டியன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  16. அன்பின் பாண்டியன் - அருமையான பதிவு - எறும்புகளும் மரத் துண்டும் புகைப் படம் அருமையான ஒன்று - தன்னம்பிக்கை என்றால் என்ன என்று விளக்கும் பதிவு. இள வயதில் சிந்தைனையும் நிகழ்வுகளும் பிற்காலத்தில் எவ்வளவு உயரத்திற்கு வருவதற்கு உதவுகின்றன எனபதனை விளக்கும் பதிவு - ஒவ்வொருவரும் கடைப் பிடிக்க வேண்டிய பதிவு - பாராட்டுகள் பாண்டியன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete